அரசுக்கும் ( State) அரசாங்கத்திற்கும் (Government) இடையிலான வேறுபாடு உணரப்படவேண்டும். ந. தெய்வ சுந்தரம்



அரசுக்கும் ( State) அரசாங்கத்திற்கும் (Government) இடையிலான வேறுபாடு உணரப்படவேண்டும். இந்திய அரசியல் சட்டம், அதைக் காப்பாற்றும் பணிக்காக உருவாக்கப்படுகிற நீதிமன்றங்கள், நாட்டை அந்நிய நாடுகளின் வன்முறை, மேலாண்மையிலிருந்து காப்பாற்றுகிற இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக நீடிக்கிற காவல்துறை, இதுபோன்ற பணிகளுக்காக நியமிக்கப்படுகிற ஆட்சிப்பணி, காவல்பணி நிர்வாகிகள் ஆகியோர் ஒருபுறம்; இவையே அரசின் உறுப்புக்களாகும். சட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு அல்லது நியமிக்கப்பட்டு செயல்படுகின்றவை இவையெல்லாம் . இவையே அரசு ( State) என்பதின் உறுப்புக்கள்.
தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பாராளுமன்றம், மாநில அவைகள் மறுபுறம். இவை உருவாக்குகிற அமைச்சர் அவைகளும் இதில் அடங்கும். இந்த நிறுவனங்களும் அரசியல் சட்டத்தைச் செயல்படுத்தவே உருவாக்கப்பட்டுள்ளன. இதுவே அரசாங்கம் (Government) .
இந்த அரசாங்கம் என்ற உறுப்பும் பிற உறுப்புக்கள்போன்று அரசு என்பதின் ஒரு உறுப்பேயாகும். அதாவது அரசாங்கம் என்பதே அரசுக்கு உட்பட்டதே ஆகும். மாறாக, அரசு என்பது அரசாங்கத்தின் உறுப்பு இல்லை.
இந்த இரண்டாவது உறுப்பை ஒருவர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு விமர்சிக்கலாம். இதற்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை உண்டு.
ஆனால் மேற்குறிப்பிட்ட முதல் உறுப்புக்களை - அரசு நிறுவனத்தை - ஒருவர் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது அரசுக்கு எதிரான குற்றமாகவே கருதப்படும்.
இந்தப் பின்னணியில் திரு. சவுக்கு சங்கரின் வழக்கை ஆய்ந்து, அவரது குற்றம் அரசுக்கு (State) எதிரானதா அல்லது அரசாங்கத்திற்கு (Government) எதிரானதா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இந்த வகையான ஆய்வை மேற்கொண்டு, முடிவுக்கு வருவதற்கு நீதிமன்றங்களுக்கே (Judicial organizations) உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அது இயற்றும் சட்டங்கள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தும் உரிமை நீதிமன்றங்களுக்கே உண்டு. மாநில அவைகள், பாராளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களையும் அவை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளனவா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் நீதிமன்றங்களுக்கே உண்டு.
ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தும் - (''விமர்சனத்திற்கு'') - உரிமை மாநில அவைகளுக்கோ பாராளுமன்றத்திற்கோ கிடையாது. பாராளுமன்றம், மாநிலப் பேரவைகள் இயற்றும் சட்டங்களை ரத்துசெய்ய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ரத்து செய்யும் உரிமை அவற்றிற்குக் கிடையாது. ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மற்றொரு நீதிமன்றமே ரத்து செய்யமுடியும்.
இதன் அடிப்படையில் திரு. சவுக்கு சங்கரின் வழக்கை ஆய்ந்தால் விடை கிடைக்கும். அவருடைய குற்றம் அரசுக்கு ( Indian State) எதிரானதா அல்லது அரசாங்கத்திற்கு (Governments) எதிரானதா? இதன் அடிப்படையில்தான் இந்த வழக்குபற்றி முடிவுக்கு வரவேண்டும்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கவும் உரிமை உண்டு. பல முறை அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அரசை கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும், மாற்றி அமைக்கவும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் எந்த நீதிபதியையும் நீக்க முடியும் என்பது சட்டமாகும்.
  • Like
  • Reply
  • 1h
  • Edited
  • தெய்வ சுந்தரம் நயினார்
    உண்மைதான் நண்பரே. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்காதவகையில் அது இருக்கவேண்டும். பாதிக்கப்படுகிறதா இல்லையா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கும்.
    வங்கி தேசியமயமாக்கம்பற்றிய வழக்கு நடைபெறும்போது, தேசியமயமாக்கத்தை எதிர்த்து வழக்காடிய வழக்கறிஞர் ( ராம் ஜெத்மாலனி என்று நினைக்கிறேன்) அச்சட்டம் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கிற சட்டம் என்று வாதிட்டார். அவ்வாறு பறிக்காமல் இருந்தால்மட்டுமே பாராளுமன்றம் இயற்றுகிற சட்டம் செல்லும் என்று வாதிட்டார்.
    அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களுமே ஒன்றில் ஒன்றுபட்டார்கள் - அதாவது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிற சட்டங்களைப் பாராளுமன்றம் இயற்றமுடியாது என்பதில்! அப்போது நீதிபதி ஒரு ஐயத்தை எழுப்பினார் - ''ஒருவேளை அடிப்படை உரிமைகளையே பாதிக்கிற சட்டம் ஒன்று மக்கள் நலன்களுக்காகத் தேவைப்பட்டால் , அதை இயற்றுகிற உரிமை உண்டா? என்று. அப்போது இருதரப்புமே ''உரிமை கிடையாது'' என்பதை ஏற்றுக்கொண்டார்கள்!
    சில நாடுகளில் ''மக்கள் வாக்கெடுப்பு (people's referendum) என்ற ஒன்று உண்டு. அதாவது எந்த ஒரு சட்டத்தையும் மக்கள் வாக்கெடுப்பு ஏற்றுக்கொண்டால் செல்லுபடியாகும். அதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் கிடையாது'' என்று இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒத்துக்கொண்டார்கள்! எனவே அடிப்படை உரிமையை ஒரு சட்டம் பாதிக்கிறது என்று நீதிமன்றம் கருதினால், அச்சட்டத்தை நிராகரிக்கமுடியும்! இந்த முடிவை எடுப்பதற்கு நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உண்டு! அப்படியென்றால் யாருக்கு உரிமை ? பாராளுமன்றத்திற்கா அல்லது நீதிமன்றங்களுக்கா? நீதிபதிகளை நீக்குகிற உரிமையிலும் உறுதியாகச் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபற்றி எனக்கு முழுவிவரம் தெரியவில்லை!
  • ==========================================
  • ஆட்சிப்பணி அதிகாரிகள் (IAS) ஊழல் செய்யாமல் 100% உத்தமர்கள் இல்லை.. அவர்களை விமர்சிக்காமல் இருக்க முடியாது...
    காவல்படையினரும் தவறு செய்கின்றனர். லஞ்சம் பெறுகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். அவர்களையும் விமர்சிக்காமல் இருக்க முடியாது.
    ஆட்சிப்பணி, காவல்பணி அதிகாரிகள் அரசின் உறுப்புகள் என்றால் அவர்களை விமர்சிப்பது அரசை விமர்சிப்பதாகவே படும்.
    • Like
    • Reply
    • 5h
    • தெய்வ சுந்தரம் நயினார்
      மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்களுக்கும் அரசால் நியமிக்கப்படுகின்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது! அரசால் ( அரசுக்கு உதவிபுரிவதற்காக அரசாங்கங்கள் நியமிக்கும் ) நியமிக்கப்படுபவர்களைக்கூட .... அவரை அரசுக்கான பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தால், அது அரசுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும்.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...