ஏகாதிபத்திய கள்ள குழந்தையே ட்ராட்ஸ்கியம்-2


 இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம்உடன் பிறந்தே கொல்லும் வியாதிபோல இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்தி கொண்டேவந்திருக்கிறது.  டிராட்ஸ்கியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்துக்குள் ஊடுறுவியுள்ள முதலாளிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என சரியாக குறிப்பிட்டார். புலிப்குணவர்த்தனா முதல் கெல்வின் ஆர்டி செல்வா வரை டிராட்ஸ்கியவாதிகள் இலங்கையில் நமக்கு காட்டி வந்து நிற்கும் சாதனைதான் என்ன?பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமானசரணாகதியும் ஆகும்.பேராசிரியர்.கைலாசபதி.

உண்மையான புரட்சியாளர்கள் மா லெ த்தின் பக்கமே நிற்கமுடியும்பேராசிரியர் கைலாசபதியும் அவ்வாறே நின்றார் என்பதை அவரதுஎழுத்துகள் நமக்கு காட்டுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் சமிபகாலமாக சில உதிரிகள் ட்ராட்ஸ்கியத்தை தாங்கிபிடித்து வருகின்றனர்.இந்த உதிரிகள்ஓடியாடி வளர்ந்த இடம் மா லெ பாசறையில்தான்.கலைஞர் அவர்கள் நெடுஞ்செழியனைபற்றி குறிப்பிடும் போது அவர்ஒரு கோண தென்னைமரம் என்பார்.ஏனென்றால் அதை வைத்து தண்ணீர்ஊற்றி பராமறித்து வளர்த்துவிட்ட பிறகு அது வளைந்து போய் அடுத்தவர் தோட்டத்தில் தேங்காய் போட்டதுபோல.

ட்ராட்ஸ்கிய உதிரிகளும் அவ்வாறே. நமது ஆசான்களால் முறியடிக்கபட்ட தத்துவபோக்குகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவது இயல்புதான். இவற்றை மாலெவாதிகள் ஒன்று பட்டு முறியடிப்பதுதான் தலையாய கடமை.

தொடர்ந்து மார்க்சிய ஆசான்களை குறை கூறுவதும் அது ஏதோ மார்க்சிய விமர்சனம் என்றும் ஏமாற்றும் இவர் யார் எதற்க்காக செய்கிறார் என்பதனை பலமுறை எழுதியாகி விட்டது. மீண்டும் ஒருமுறை அவர்கள் வைத்துள்ள கேள்விகளூக்கு பதிலளிக்க தயாராகிக் கொண்டுள்ளோம். அதற்க்கு முன் அவரிடம் சில கேள்விகள். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" நூல் வாசிதுள்ளீரா? மேலும் லெனின் எழுதியுள்ள "ட்ராட்ஸ்கிக்கு எதிராக" நூல் வாசித்து விட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.
============
நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மார்க்சிய முன்னோடிகள் பதில் கொடுத்துள்ளனர் அதனை முழுமையாக யாரும் தொகுக்கவில்லை அவ்வளுவே .... 

நான் எழுதி கொண்டிருக்கும் "ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?" என்ற கட்டுரையில் தோழர் பி.சினிவாச ராவ் அவர்கள் எழுதி பகுதி இன்னும் குறைவாக உள்ளதால் எனது எழுத்தை தொடர தேடிய போது எனது எழுத்துக்கு வழு சேர்க்கும் வகையில் கிடைத்த நூல் "AGAINST TROTSKYISM " உண்மையில் நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே செய்தி உள்ளது ஆகவே அதனை பற்றிய என் கருத்தை பதிவு செய்கிறேன்.
ட்ரொட்ஸ்கிசம் என்பது ஒரு மார்க்சிய எதிர்ப்பும்,குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்குமே என்பதனை ஆரம்ப வரிகளே தெளிவுப் படுத்தி விட்டது. ஆகவே இங்குள்ள சந்தர்பவாத மார்க்சிய விரோத கூட்டம் கூப்பாடு போடுவதில் உண்மையில்லை, இவர்களின் எழுத்தும் பேச்சும் முழுக்க முழுக்க புரட்சிகர சக்திகளை சீர்குலைக்கு வேலையே... ட்ராட்ஸ்கி மார்க்சியத்தையோ லெனின்யத்தையோ தூக்கி பிடிக்கவில்லை மாறாக புரட்சியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதை தவிற வேறொன்றும் செய்யவில்லை.

"AGAINST TROTSKYISM " நூலில் லெனின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதை போல் அகிலமும் ட்ராட்ஸ்கியின் கட்சி விரோத போக்கை கண்டித்துள்ளது மேலும் அவ்வப்போது நடந்த வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.
அதன் முன்னுரையில்:-
லெனினின் படைப்புகளில் இருந்து (அவற்றின் முழுமையான அதாவது ட்ராட்ஸ்கியத்தை எதிர்த்த பகுதிகள்) மற்றும் போல்ஷிவிக் கட்சியின் மாநாடுகள் சி.சி.யின் முழுமையான கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகள், ட்ரொட்ஸ்கிசம் ஒரு மார்க்சிச எதிர்ப்பு, சந்தர்ப்பவாத போக்கு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது, அதன் மோசமான நடவடிக்கைகளைக் காட்டுகிறது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மற்றும் இரண்டாம் சர்வதேச சந்தர்ப்பவாத தலைவர்களுடனும், பல்வேறு நாடுகளின் தொழிலாளர் கட்சிகளில் திருத்தல்வாத, சோவியத் எதிர்ப்பு போக்குகள் மற்றும் குழுக்களுடனும் அதன் உறவுகளை அம்பலப்படுத்துகிறது. உள்ளூர் கட்சி அமைப்புகள் நிறைவேற்றிய தீர்மானங்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சி.பி.எஸ்.யுவின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது.
கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்றுக்கொண்ட முடிவுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சோவியத் தொழிற்சங்கங்களின் தீர்மானங்கள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்புகள் இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்ட பொருளைப் பயன்படுத்த உதவுகின்றன.

1943ஆண்டு 21 ஜனவரி 01 ல் வெளியான ஜனசக்தியில் தோழர் பி. சீனிவாசராவ் கட்டுரையின் சுருக்கிய இறுதி பகுதி.(அவரின் பகுதியில் உள்ள தேவையான பகுதிகளை எடுத்தெழுதினேன்).

1. லெனின் சரியான வழிகாட்டினாரென்றும் ட்ராட்ஸ்கி அந்தப் பாதையில் போக வேண்டுமென்று கூறியதற்க்காக ஸ்டாலின் அவரை எதிர்த்து நாடு கடத்திவிட்டதாகவும் ஸ்டாலின் உலக மக்களின் துரோகி என்றும் பிரசாரம் செய்கின்றனர்.

2. 1918 ஜீலை 4 மற்றும் 5 ந் தேதிகளில் சோவியத் காங்கிரஸ் கூடியது. ட்ரொட்ஸ்கியின் அனுமதியின் பெயரில் மாஸ்கோவில் எதிர் புரட்சியினர் கலகத்தை ஆரம்பித்தனர், இதனை சோவியத் படை நசுக்கி விட்டது. ஜெர்மனுக்கும் சோவியத்துக்கும் போர் ஏற்படுத்தி ஆட்சி கவிழ்த்து அதிகாரத்தை கைபற்ற ட்ரொட்ஸ்கி முயற்ச்சி செய்தார்.

3. ட்ராட்ஸ்கி உலக மக்களின் விடுதலைக்கு (புரட்சிக்கு) வேலை செய்தாரா அல்லது ஸ்டாலின் செய்தாரா இதனை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை தெரிந்து கொள்ள 1917 ல் நடந்த ரசிய புரட்சி மற்றும் அந்த கால கட்டத்தில் கட்சிக்குள் ட்ராட்ஸ்கியின் பணி போல்ஸ்விக் கட்சியையும் சோவியத் அமைபையும் அழிபதற்க்கு செய்த பல சதிகள் ட்ரொட்ஸ்கியின் உண்மை பக்கத்தை வாசித்திருப்பீர் என்று நம்புகிறேன்.

ஒரு புரட்சிகாரர் எப்படி துரோகியாக முடியும். தொழிலாளி வர்க்க வரலாற்றில் பல புரட்சியாளர்கள் முதாலாளி வர்க்க கோஸ்டியின் குலாம்களாக(அடிமைகளாக) மாறியிருக்கிறார்கள். இத்தாலிய பாசிஸ்ட் முசோலினி ஒரு காலத்தில் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடைய தலைவனாக் இருந்தான். பின்னர் முதலாளிகளின் கையாளாக மாறி தன்னுடன் பணி புரிந்த பல தோழர்களை சித்தரவதை செய்தான், பிரான்ஸில் டோரியட் என்பவன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிச கூட்டத்தில் போய்ச் சேர்ந்து பின் பிரெஞ்ச் பாஸிஸ்ட் தலைவனாகிறான். 1914 ஆம் ஆண்டு பல சோசலிஸ்ட் தலைவர்கள் ஏகாதிபத்திய கும்பலின் கையாட்களாக மாறித் தன் சக தோழர்காளை கொன்றொழிக்க (கொலை) செய்திருக்கிறார்கள். இவை வரலாற்று புரிதலுக்கு.

சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.

அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் 1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 

1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.

1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.

அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.

இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸத்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….

தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் ஸ்டாலின் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.

லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினியத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.

ட்ராட்ஸ்கியத்தை தோல்கொடுக்கும் சிலர்.

Annupurselvaraj Selvaraj

மீண்டும் பொய்யையே வாந்தி எடுக்கிறீர்களே Mr.Ravindran அவர்களே. லெனினுக்கு பிந்தைய மூன்றாவது அகிலத்தின் தலைவர்களின் நிலைப்பாடும், மார்ஷல் ஸ்டாலின் நிலைப்பாடும்
(1.பாட்டாளி வர்க்க சர்வதேசியம் கைவிட்டது.
2.வர்க்க போராட்டம் கைவிட்டது.
3.ஐ.நா.நிறுவியது
4.கம்யூனிஸ்ட் அகிலம் கலைப்பு
5.ஜனநாயக மத்தியத்துவம் நிராகரித்தது.)
மார்க்சியம் அல்ல முதலாளித்துவ நிலைப்பாடு என்பதையே
இந்திய கம்யுனிஸ்டு லீக் (சர்வதேசியம்) பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
அதை மூடி மறைத்து விட்டு மார்க்சியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதாக அறிவு நாணயம் ஏதும் இன்றி கதை விடுகிறீர்களே.
மார்க்சிய கோட்பாட்டில் இருந்து ஸ்டாலினை மதிப்பிடுவதற்கு மாறாக
மார்க்சியம்-லெனினிசம் பெயரால் ஸ்டாலின் புகழ் பாடுவதும்,
சூழ்நிலையை காரணம் காட்டி கொள்கையை கைவிட்டு ஏகாதிபத்திய வாதிகளுடன் கைகோர்த்து கொண்டது (கொள்வது)தான் இயங்கியல், மார்க்சியம் என்று மார்க்சியத்திற்கு
புதிய விளக்கம் கொடுக்கிறீர்கள்.
அன்று மார்க்சியத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்திற்கு ஜனநாயக முலாம் பூசினார் உங்கள் தலைவர் மார்ஷல் ஸ்டாலின்.
இன்று அவர் வழியில்
அவரது சீடரான நீங்கள் அதே பணியை தொடர்கிறீர்கள்.

Annupurselvaraj Selvaraj சற்று இதற்க்கான பதில்கள் அன்றைய சோவியத் கொடுத்துள்ளது அதனை நீங்கள் வாசித்திருந்தால் புரிந்திருக்கலாம், பரவாயில்லை நீங்கள் புரிந்திரிக்காவிட்டால் அல்லது வாசித்திருக்காவிட்டால் என்னால் இயன்றளவு எழுதியுள்ளேன் வாசித்து பாருங்களேன் மேலும்.....உங்களை ஸ்டாலினை யார் சுமக்க சொல்கின்றனர் அவர் எங்கள் தலைவர்தான் அதனால் நாங்கள் அவரை ஏற்கிறோம். அவர் உங்கள் தலைவர் இல்லையே அப்படி என்னும் பொழுது நீங்கள் ஏன் உங்களின் தலைவரை பற்றியும் உங்களின் தத்துவம் பற்றியும் பேசுவதில்லை? உண்மையில் உங்களுக்கு திறன் இருந்தால் உங்கள் தலைவரின் படத்தை போட்டு அரசியல் பேசுங்கள் அப்பொழுது நாங்களும் உங்களுடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும். நீங்கள் (உங்கள் சித்தாந்தம்) யார்? உங்களின் செயல் என்னே என்பதனை தெளிவுபடுத்தி விட்டு பேசினால் சிறப்பாக இருக்கும். மார்க்சிய ஆசான்களை அன்றைய சோவியத் எதிர்கள் முதல் ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் ஈறாக வசைமாறி பொழிவதையே தொழிலாக கொண்டுள்ளனர் ஆனால் அவர்களின் எண்ணம் என்னவோ மார்க்சியத்தை மறுப்பதும் சீர்குழைபதும்தான் நீங்கள் அந்த வரிசையில் நின்றுக் கொண்டு யாருக்காக சேவை செய்கின்றீர் அதை மட்டும் புரிய வையுங்கள்.

Annupurselvaraj Selvaraj

பொய் பிரச்சாரத்திற்கு புகழ் பெற்ற கோயபல்ஸை மிஞ்சும்
திருவாளர் Ravindran அவர்களே.
ஸ்டாலின் காலம் வரை சோசலிசம் கொடி கட்டிப் பறந்த ரஷ்யா குருச்சேவ் ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவமாக மாறிவிட்டது என்று தான் ஸ்டாலின் வாரிசுகள் கூறினார்கள்.ட்ராட்ஸ்கியவாதிகளால் மாறிவிட்டது என்று கூறவில்லை.
சீனாவில் மாவோ இருந்தவரை சரியாக இருந்தது டெங் வந்தவுடன் முதலாளித்துவமாக மாறிவிட்டது என்று தான் கூறினார்கள்.ட்ராட்ஸ்கியவாதிகளால் மாறிவிட்டது என்று கூறவில்லை.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதன் முதலில் பிளவுபட்ட போதும் குருச்சேவ் திருத்தல் வாதத்தை எதிர்த்து மாவோவின் வழியை ஆதரித்து சி.பி.எம் உருவானது.அப்போதும் இதற்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் தான் என்று யாரும் கூறவில்லை.
அடுத்து
எம்.எல்.இயக்கம்
பிளவுபட்ட போதும் இதற்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் என்று யாரும் கூறவில்லை.
தொடர்ந்து லிபரேஷன்,
மக்கள் யுத்தம்,
ரெட் ஃபிளாக், மாவோயிஸ்ட் கட்சி,SUCI,
TNOC, போல்ஸ்விக் குழு, SOC இன்னும் பல்வேறு மா.லெ.குழுக்கள் இந்தியா முழுவதும் சிதைந்து போய் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் அத்தகைய பிளவுகள் ஏற்படும் போதெல்லாம் எந்த ஒரு குழுவும் இந்த பிளவுகளுக்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் தான் என்று கூறவில்லையே.
மேலும் இந்த குழுக்களின் தலைவர்கள் குறுங்குழுவாதிகளாக இருப்பதற்கு காரணம் ட்ராட்ஸ்கிய நிலைப்பாடுகள் தான் என்று கூட யாரும் கூறவில்லை.
மேலும் 90களில் ரஷ்யா சிதைந்த போதும் கார்ப்பச்சேவ் கலைப்பு வாதம் தான் காரணம் என்று தானே உங்கள் முன்னால் தலைவர் கோதண்டராமன் கூறினார்.ட்ராட்ஸ்கிய
வாதத்தால் சிதைந்து போய் விட்டது என்று கூறவில்லை.
ஏன் ஏ.எம்.கோதண்டராமன்உங்களைவெளியேற்றும் போது கூட ட்ராட்ஸ்கியவாதி என்று கூறி வெளியேற்றவில்லை.
மாறாக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்,
ஏகாதிபத்திய ஏஜெண்ட் என்று தானே வெளியேற்றினார்கள்.
இப்படி ஒரு முக்கால் நூற்றாண்டாக உலக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கலைந்ததற்குகுருச்சேவ திருத்தல் வாதமும்,கார்ப்பச்சேவ் கலைப்பு வாதமும் தான் காரணம் பாராயணம் படித்து விட்டு இன்றைக்கு வந்து இந்தியாவில் புரட்சிகர கம்யுனிஸ்டு கட்சியை கட்ட ட்ராட்ஸ்கியவாதிகள்
தடையாக இருக்கிறீர்கள் என்று புளுகுகிறீர்கள்.
புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் தான் புரட்சிகர கட்சி கட்ட முடியும்.
புளுகு மூட்டைகளை கொண்டு புரட்சிகர கட்சியை கட்ட முடியாது. 

இதற்க்கு பதிலாக நான் கட்சி கட்டுவதில் இங்கு ஏற்பட்ட பின்னடைவுகளை வேறோரு பதிவில் எழுதியுள்ளேன் வாசித்தால் சிறப்பாக்கா புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்..





No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...