அரசு பற்றி இன்னும் குழப்பம் ஏன்?
ஒவ்வொரு மனிதனது தற்கால-கடந்த கால செயல்கள் அரசை மையமாகக்கொண்டு அமைந்ததாகும், மனித சமுதாயம் வர்க்க ரீதிதில் பிளவுபட்டிருக்கும் போது சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவர்கள் என இரண்டு பிரிவு இருக்கும் போது பொதுவான அரசாக இருக்குமா? அரசை ஆயுதமாகக் கொண்டு ஆளும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.ஆப்படி என்னும் பொழுது இது ஆளும் வர்க்கத்தின் அரசல்லவா?
அரசாங்கங்கள் (கட்சிகள்) மாறிமாறி வரலாம். ஆனால் பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினது அரசு இயங்கி வருகிறதல்லவா?
(விரிவாக மாற்றி அமைக்க வேண்டும்)
இதுவரை நிலவி வந்த அரசுகள் என்னென்ன?
மனித சமுதாய வரலாற்றில் அடிமையுடைமையரசு, நில பிரவுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு, ருசியா அக்டோபர் புரட்சிக்குப்பின் தொழிலாளர் அரசு என நாங்குவகையான அரசுகளை உலகம் கண்டுள்ளது.
ஆளுவதற்கென்று ஒரு குழு இருக்குமாயின் அக்குழு மக்களை பலாத்காரமாக அடக்கி ஆளுவதற்கென்றே விசேஷமான நிருவனத்தை அமைத்துக்கொள்கிறது. குறிப்பாக சிறைக்கூடம், ஆயுதப் படை, இராணுவம் ஆகியன இந்நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவதே அரசு. (லெனின் அரசு பற்றிய நூலில்) அடக்கி ஆளப்பயன்படும் மேற்கூறிய நிறுவனங்களைத் தவிர மற்றும் நீதி நிர்வாகம், தனியாருக்கு சொந்தமான உற்பத்தி, ஊடகம் மற்றும் அரசதிகாரிகள் அவர்கள் சார்ந்த கூட்டம் ஆகியன சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்துவதற்காக பயன்படும் சாதனங்களாகும். இவை அத்தனையையும் கொண்டு அமைவதே அரசு. இப்படியிருக்கும் வர்க்க அடிப்படையிலான அரசை வர்க்கப்பேதத்தை அகற்றிய பின்பே அரசின் பலாத்காரம் பயன்படுத்தும் தன்மை அகற்றப்படுகிறது. உற்பத்தி முறையாலும் மற்ற நிர்வாகத்தினலும் சிலரால் இயக்கப்பட்ட அரசாங்கம் அகற்றப்படுகின்றது. (எங்கல்ஸ், ‘குடும்பம் தனியார் சொத்து - அரசு' ஆகியவ்ற்றின் தோற்றம்).
ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கிய வர்க்கத்தின் சாதனமான அரசை பொறு பேற்றுத் தனது வர்க்கத்தேவைக்கேற்ப இயலாதென்பதை கடந்த கால வரலாறு பல வழிகளில் அச்சுறுத்தியுள்ளது. தனது வர்க்கத்தின் நலன் கருதி அவ்வர்க்கத்திற்கு எற்றவாறு ஒடுக்கப்பட வர்க்கத்தின் அரசாக மாற்றியமைக்க வேண்டும். அரசாங்கங்களின் மாற்றத்தால் அடிப்படை சமுதாய மாற்றம் நிகழாது.எனவே அரசின் அடிப்படை அமைப்பு பரிபூரண மாக மாற்றப்படல் வேண்டும்.
இவ்வுண்மையை ருசியா,சீன, மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின் புரட்சியின் மூலம் அடைந்த மாற்றம் அந்த நாடுகளில் பிரதிபலிதது.
அரசபலம் என்பது அரசியலின் கருவூலமாக அமைந்துள்ளது. நாம் பொதுவான(வர்க்க பேதமற்ற) சமுதாயத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பொருளாதார சக்தியை முறியடிக்க வேண்டும். அவை சீர்திருத்ததின் மூலம் சாத்தியமல்ல என்று பலநாட்டு வரலாற்று படிப்பினைகள் கூறுகின்றது. ஆக உள்ள அமைப்புமுறையை மாற்றாமல் வர்க்கமற்ற சமூகம் சாத்தியமல்ல.
சிலி நாட்டின் படிப்பினை என்னே?
சிலி நாட்டில் எற்ப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக உலகில் அரசு சம்பந்தப்பட்ட மார்க்சிய சித்தாந்தம் உறுதிபாட்டை அடைந்துள்ளது. அந்நாட்டின் அரசு நிர்வாகத்தை சட்டரீதியாக சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கைப்பற்றின. ஆனாலும் ஆயுதப்படை, அரசின் கருவிகளை அகற்றுவர்தற்கு முயன்ற போது, அரசின் உறுப்புகளாகிய அதன் தூண்கள் தங்களுடைய சச்தியின் பலத்தை பயன்படுத்திக் கொண்டு சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அழித்து விட்டனர். அரசு என்ற அமைப்பு சமுதாயத்தின் வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியதாகும்.ஆளும் கட்சிகளின் வர்க்க நலன் கருதி-அவசியமானதாகும் அரசு என்பது. அரசு சமுதாயத்திற்கு மேலானது அல்ல. மாறக அரசின் அமைப்பை உருவாக்குவது சமுதாயமாகும்.அரசின் அதிகாரம்,குறிப்பாக நவீனகால அரசின் அதிகாரம் நிரந்தரமான பல பகுதிகளைக் கொண்டதுமாகும். இவ்வதிகாரம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பிரயோகிக்கப்படுகின்றது. இந்நிறுவனங்கள், எற்கனவே, கூறியதுபோல், பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழான மாற்றங்களினல் பாதிக்கப்படுவதில்லை. இதில் தலையாயது ஆட்சி நிர்வாகமாகும். அரசு பணித் துறை, போலிஸ், ஆயுதப்படைகள்,நீதித்துறை, அத்துடன் கல்வி, மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினை உருவாக்கும் துறைகள் ஆகியன இந்த வர்க்க அமைப்பில் அடங்குகின்றன. தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் மாற்ற மடைந்தாலும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் மாறுவதில்லை. தீவிர அரசியல் போக்குடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிறுவனங்கள் மாற்றமின்றி தாக்குப்பிடித்து விடுகின்றன. இவை, ஆட்சி நடத்தும் வர்க்கத்தைப் பிரதிபலிப்பதுடன் அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றன. இந்நிறுவனங்கள் மூலம் சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ள வர்க்கத்தினரின் நீடித்த ஆட்சியும் நிலநாட்டப் படுகின்றது. ஆகவே ஒவ்வொரு அரசும், அதன் வர்க்க அடிப்படையினால் உற்பத்தி முறை, உற்பத்தி உறவு, சொத்துடைமை ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக அரசின் பண்பு நலன்கள் உட்பட அரசு அதிகாரம் முழுவதுமே மாற்றியமைக்கப்படுவது மிக அவசியமாகும். இவற்றிலிருந்து அரசு வேறு, அரசாங்கம் வேறு என்று தெளி வாகிறதல்லவா? அரசாங்கம் என்பது தற்காலிகமாகக் கிடைக்கும் ஆட்சி நிர்வாகமும் சட்டமன்ற அதிகாரமுமேயாகும். தற்காலிகமாகக் கிடைக்கும் இவ்வதிகாரத்தைக் கொண்டு அரசு அதிகார அமைப்பை முற்றக மாற்றி விடாமல், அதே சமயம் தீவிரமான சமுதாய, பொருளாதார மாற்றங்களைச் செய்ய வேண்டுமே அல்லாது வெறுமனே பாராளுமன்ற பெரும்பாண்மை பெற்று ஆட்சியில் அமர்ந்துவிடுவதில் எவ்வித பயனுமில்லை.இப்படியான கட்டத்திலேயே அரசு பணித்துறை, ஆயுதப்படைகள், நீதித்துறை உட்பட மற்றைய எல்லா அரசு நிறுவனங்களும், அவற்றுடன் பல்வேறு சமூக, பொருளாதார சக்திகளும் சேர்ந்து கொண்டு ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் சட்ட மன்ற, நிர்வாக அதிகாரத்திற்கு சாவுமனியடிப்பதற்காகக் கொதித் தெழும்புகின்றன. ஆயினும், ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளும் தத்தமது சொந்தகொள்கைகளை நிறைவேற்றுவதற்காக தமக்குள் போராடும் போது அரசின் நிலை தெளிவற்றதாயிருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்த சில விளைவுகள் உண்டாகும். உதாரணத்திற்கு, அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளனவான ஆளும் வர்க்கத்துக்குள்ளும் அரசுக்குள்ளும் உள்ள சக்திகளின் நடுவர் போல் தோற்றமளிக்கும் அரசாங்க நிருவாகத்துறையானது கூடுதலான சுயாதீனத்தைப்பெறும். இவ்விடத்தில் அதிகாரப் போட்டியானது பாராளுமன்ற அரங்கத்திலிருந்து வெளிப் பட்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலம் செறிந்துள்ள நிலைகளான முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளும் முதலாளித்துவ அரசுக்குள்ளும் விரிந்து பரவும். இதன் எதிரொலியை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் காணலாம். இவை மூலமாகவே நெருக்குதல் பிர் யோகிக்கப்படுகின்றன. இந்நிலயைத் தற்கால ஜப்பானில் காணலாம். அங்கு லிபரல் கட்சியின் தலைவரை அக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்ப தில்லை. பெரிய தொழில் நிறுவனங்களும் வர்த்தக தாபனங்களுமே லிபரல் கட்சியின் தலைவர் தெரிவைத் தீர்மானிக்கின்றன. சில சமயத்தில் ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி மிகவும் உச்சகட்டத்தை அடைந்துவிடும். அவ்வர்க்கங்கள் தமக்கிடையில் சமமான பலத்துடன் முட்டி மோதிக்கொள்ளும். இந்நிலையிலேயே, இவ் விருவர்க்கங்களையும் சமரசப்படுத்தும் வகையில் நடுவர் ஒருவர் தலைதூக்குவ துண்டு. இத்தகைய நடுவர், அச்சூழ்நிலயில் பலம் வாய்ந்தவராகவும் மதிக்கப்படுகிறவராகவும் தோற்ற மளிப்பார். அவரது செயல்களும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரானவை போலவே தோற்றமளிக்கும். ஆனல் உண்மை பைச் சொல்லப் போனல், சமுதாயம் இதனுல் உருப்படியான மாற்றமோ பலனே அடைவதில்லை. உற்பத்தி உறவுகளும் நடைமுறையிலுள்ள சமு தாயத்தின் பொருளாதார அடிப்படையும் மாற்றப்படாத வரையில், வறும் தலைமைப்பீட மாற்றங்களால் எவ்வித பயனுமில்லை. வரலாறு இத்தகைய பல சம்பவங்களைக் கண்டுள்ளது. ஜூலியஸ் சீஸர், முதலாம் நெப்போலியன், லுயிஸ் நெப்போலியன் ஆகியோர் இப்படியாக உருவாகியு தலைவர்களேயாவர். : . . . . இவ்வாறன காலகட்டத்தே, அதாவது ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையேயும் அல்லது ஆளும் வர்க்கத்தினரும் வறிய வர்க்கத்தினரும் அவைகளுக்கிடையேயும் முட்டி மோதிக்கொள்ளும்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள், இருதரப்பினரில் யாராவது ஒரு தரப்பினருக்குச் சாதகமாக இருந்து விடுவதுண்டு. இப்படியான காலகட்டத்தேதான், ஒரு வர்க்கத்தை நசுக்குவதற்கான இன்னெரு வர்க்கத்தின் அரசியல் அதிகாரக் கருவியாக விளங்கும் அரசு, மாற்றமொன்றிக்கு உள்ளாகிறது. எல்லாவர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட சுயாதீன நிலயொன்றினை அரசு அடையும், சமுதாயத்தின் தலையாய சக்தியாக விளங்கும். ஆயினும் இவ்விடத்தில் எனினும் அரசு அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. போனபார்ட் ஒரு வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறர். அந்த வர்க்கம், பிரெஞ்சு சமுதாயத்திலேயே பெரும்பான்மையாக உள்ள சிறு உடமை விவசாயிகளாவர்.' . இதன்படி போனபார்ட் ஒருவர், நடைமுறையிலுள்ள சமூக, பொருளாதார அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்தபோதிலும், அரசு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இம்மாற்றங்கள் இருந்து இந்த நிலைமையை எங்கெல்ஸ் பின்வருமாறு விளக்குகிறர்: ‘அபூர்வமான சில சந்தர்ப்பங்கள் தவிர, எவ்வாறயினும், மோதிக் கொள்ளும் வர்க்கங்கிடையிலான சமபல நிலையில், நடுவராசத் தலைதுக்கும் அரசு, அச்சமயத்துக்கு ஒரளவான சுயாதீன நிலைமையை தற்காலிகமாக அடைகிறது.’’ ஆகவே, போனபார்ட்டிஸத்தினல் தொழிலாளர் வர்க்கத்தினர் சுதந்திரம் பெற்றலும் சமூக, பொருளாதார ரீதியாக பழைய அமைப்புக் குள்ளேயே அவர்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. - - - இவ்விடயத்தில் மார்க்சின் கண்ணோட்டம் மிகத் தெளிவானதாகும். பழைய அரசு நிருவாக யந்திரத்தை தொழிலாள வர்க்கம் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆனல் அதே நிருவாக யந்திரத்தை பயன்படுத்தாமல் புதிய நிருவாக அமைப்பை உருவாக்க வேண்டும். வேறு சமூக வர்க்கங்களுக்கு மேலாக தொழிலாளர் வர்க்கம் அடைந்து விட்ட மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய நிருவாக யந்திரம் விளங்க வேண்டும்.ஆனல் முந்திய புரட்சிகளிலும் முந்திய சமூக அமைப்புகளிலும் போலல்லாது, மேலாதிக்கம் பெற்றுவிட்ட தொழிலாளர் வர்க்கம், முதலாளித்துவ சொத்து உரிமைகளையும் முதலாளித்துவ சொத்து உறவு களையும் உடைத்தெறியவும் தனியொருவர்க்கத்தை உருவாக்கவும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஒரு வர்க்கமென்பது உற்பத்தியோடு உறவுகொண்ட வர்க்கமாகவே இருக்கும். இதுவும் கால கட்டத்தில் மறைந்துபோய் வர்க்கமற்ற ஒரு சமுதாயமாகிவிடும். இந்த வர்க்கமற்ற சமுதாயமே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் விளங்கும் இதனல் முதலாளித்துவத்தின் சமூக, பொருள்ாதார முரண்பாடுகளுக்கும் முற்றப்புள்ளிவைக்கப்படும். இதிலும், தொழிலாள்ர் அரசு என்பது கூட ஒரு இடைக்கால நிகழ்வாகவே இருக்கும். அதுவும் படிட்படியாக மாறி பரிபூரணமான சமதர்ம சமுதாய அரசு எற்படும். மக்கள் முழுப்பேரும் ஒருமுகப்பட்டு இபங்கினுல்தான் இந்நிலயை அடைய முடியும். இம்முயற்சி ல் நிரந்தர ராணுவப் படைகள் அகற்றப்படும் ஆயுதந்தாங்கிய மக்கள் ராணுவப் பணிக்கு பொறுப்பாக இருட்பர். அரசாங்க நிருவாகத்தை உயர்ந்த பதவியிலுள்ளவர் முதல், தாழ்ந்த பதவியிலுள்ளவர் வரை எல்லாரும் நடத்துவார்கள. டிராஸ்கியின் வார்த்தைகளில் - 'அரசு ஆரம்பத்திலிருந்தே இரட்டை குணதிசயங்களை நேரிடையாகப் பெற்றது. உற்பத்திக் கருவிகளல் சமூக உரிமையைப் பாது காத்த வில்ை சோஷலிஸ் உருக்கொண்டது. அதேசமயம் பொருட்களன் விநியோகத்தில் முதலாளித்துவ பாணியிலான் வழிகளைப் பின்பற்றிய தால் பூர்சுவா வேடம் பூண்டது." . அத்துடன், லெனின் தாம் உருவாக்கிய தொழிலாள வர்க்க அரசு பற்றி முறையாகவும் பூரணமாகவும் ஆராய்வதற்கு முன்பே அவர் எவ்வாறு மரணமடைந்தார் என்பதையும் டிராட்ஸ்கி விளக்கியுள்ளார். லெனின் தாம் உருவாக்கிய அரசு, ‘பூர்சுவா இல்லாத ஒரு பூர்சுவா அரசு' என்று வருணித்துள்ளபோதிலும், டிராட்ஸ்கிமினல் வர்ணிக்கப்பட்டவாறு இந்த இரட்டைக் குணதிசயம் புதிய அரசின் அமைப்பை பாதிக்கவே செய்தது. இந்நிலயில் ஸ்டாலினுடைய போனபார்ட்டிசமே சோவியத் அரசு தனக் கென தனியொரு சுயாதீனத்தை அடைவதற்கு உதவியது. இச்சுயாதீனம் புதிய நிருவாகத்துறையொன்று வேரூன்றவழிவகுத்தது. இந்த நிருவாகத் துறை தனக்கென பல்வேறு சிறப்புரிமைகளைக் குவித்துக்கொண்டது. எந்த சமூக அமைப்பு மூலமாக, எந்த சமூக அமைப்புக்காக இப்புதிய நிரு வாகத்துறை நிறுவப்பட்டதோ அது அந்த இலட்சி பங்களுக்கு மாறக தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கெர்ண்டது. அரசு என்பதில் நிரு வாகத்துறையின் ஆதிக்க நலம் மேம்பட்டு நிற்கிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தையும் காட்ட முடியும். ^ عی முதலாளித்துவ சமுதாய அமைப்பிலிருந்து விடுபட்டுவிட்ட சோவி யத் யூனியனும் மக்கள் சீனக் குடியரசும் ஒரேவிதமான சித்தாந்தை 16 யும் ஒரேவிதமான வர்க்க அடிப்படையையும் கொண்டுள்ள போதிலும் அவ்விரண்டு த டுகளின் ராணுவங்களும் எல்லையின் இருபுறமும் எதிரும் புதிருமாக நிற்பது, அவற்றின் நிருவாகத்துறைத்களை தெளிவாகப் பிரதி பலிக்கின்றன. இக்கட்டத்தில், எம்மைப் பொறுத்தளவில் அவசரகாலச் சட்டமொன் றுக்குள் நாம் இருக்கிறேம், முதலாளித்துவ முறைகள் இன்னும் இடம் பெற்றுள்ளன. இந்நிலயில் நமது நாட்டின் அரசு யந்திரத்தை ஆராய் வது மிக முக்கியமாகும். இங்கு நமது சமுத்ாயமும் கொதிகலனில் உள்ள நிலைமையிலேயே உள்ளது. விவசாயிகள் தொழிலாளர்களின் பிரதிநிதிக ளானகட்சிகள் தம் கைகளில் உள்ள அரசியல், சட்டத்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருவதே இதற்குக் காரணமாகும். இதனுல் நிருவாகத் துறையினரும் மற்றைய முதலாளித்துவ அமைப்புகளும் ஆத்திர்மடைந் துள்ளன. தங்களது அதிகார சொகுசுக்கு ஆபத்துவந்துவிட்டதாக அஞ்சுகின்றன. ஒவ்வொரு தனி நபரின் தலைவிதி முற்றக சமுதாயத்தின் தலைவிதியுடன் கட்டுண்டு இருப்பதால், ஜனநாயகம் என்பது தனி நபரின் சுதந்திரங்களை மாத்திரம் மலர்ச்சியுற செய்வதன்று. அதன் பொருள் மக்களுடன் பொறுப்புகளைக் கூட்டாகத் தெரிவிப்பது என்பதே. -திரிப்போலித் திட்டம், அல்ஜீரியா, 1962 உலக மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் உயிர்வாழ்வதே கஷ்டமாக இருக்கும் வரை, உலகம் பரஸ்பரம் இணங்கிவர இயலாது. -ஊதான்ட்
No comments:
Post a Comment