சாதியின் உருவாக்கம்- ஒரு மார்க்சிய புரிதல்

 

 பார்ப்பனர் சாதியக்கட்டமைப்பில் உச்சத்தில் உள்ளனர் என்று சொல்வதால்...
*வருணமுறை
*சாதியம்,தீண்டாமை
ஆகியவற்றை அவர்களே தோற்றுவித்தனர் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
1]தனிச்சொத்துடைமை தான் வருணமுறை தோன்றக்காரணம் என்பதில் மாற்றமில்லை.சத்திரிய அரசர்கள் தன் ஆட்சியை தொடர வருணமுறை பயன்பட்டது.வருணமுறைக்கு தேவையான சட்டத்தை கௌடில்யர் உருவாக்கிய அர்த்தசாஸ்திரம் பயன்பட்டது.அதோடு புராணங்கள்,இதிகாசங்கள் மூலமாக வருணமுறை மக்களின் வாழ்க்கை முறையாக மாறிட சத்திரிய அரசர்களுக்கு பிராமணர்கள் ஆதாரமாக விளங்கினர். ஆக,வருணமுறை தோன்ற பார்ப்பனியம்,இந்துமதம் காரணமல்ல.உற்பத்திமுறையில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமை காரணமாகும்.
அதேபோல்....
2]சாதியம்,தீண்டாமை தோன்றிட நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை காரணம்.அத்துடன் அகமணமுறை,பிறப்பால் உயர்வு தாழ்வு,படிநிலைவேறுபாடு,சடங்குகள் போன்றவை நிலவிட நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.இங்கும்,சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம்,அல்லது சமூகவேர் அல்லது பொருளாதார அடித்தளம் பார்ப்பனியம்,இந்துமதம் அல்ல.நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே காரணம்.அந்த அடித்தளத்தின் மேலே எழுந்த மேற்கட்டுமானம் தான் மதம் மற்றும் சாதியம்,தீண்டாமை ஆகும்.ஆகவே சாதியம்,தீண்டாமை ஒழிந்திட அதற்கான பொருளாதார அடித்தளத்தை வீழ்த்திவிட்டால்,அதாவது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை தகர்த்து விட்டால் சாதியம்,தீண்டாமை ஒழியும் என அம்பேத்கர்,பெரியார் கூறியதில்லை.அவர்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஆதரித்தனர்.
3]இலங்கையில் பார்ப்பனிய மதம் இல்லை.ஆனால் சைவ வேளாளர் உண்டு.அவர்களே நிலப்பிரபுத்து  வர்க்கங்கள். இங்கே புத்தமதம் உண்டு. புத்த சிங்களரிடையே சாதியம் உண்டு. தமிழரிடமும் அங்கு சாதி உள்ளது. ஆக சாதியம்,தீண்டாமை நிலவிட பார்ப்பனியம் இந்துமதம் காரணமல்ல. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை என்பதை மஜஇக-வின் ஆவணங்கள் மட்டுமே கூறுகின்றன.
5]ஆப்பிரிக்காவில்,ஜப்பானில் கூட சாதியம் உள்ளது.ஆனால் அங்கே பார்ப்பனியம்,இந்துமதம் இல்லை.எனவே சாதியம்,தீண்டாமை நிலவிட பார்ப்பனியம்,இந்துமதம் என்றார்களே பெரியாரும் அம்பேத்கரும் அது சரியா என மஜஇக-வினர் கேட்கின்றனர்.
6]வெளிநாடு ஏன்? இந்தியாவின் அஸ்ஸாம்,மிசோரம்,மணிப்பூர் போன்ற பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை உருவாகவில்லை.ஆகவே அங்கும் சாதியம்,தீண்டாமை இல்லை.எதற்காக இதைச் சொல்கிறோம்?
சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே என்பதற்காகத்தான்.கண்ணைமூடிக்கொண்டு தநாமாலெ போன்ற அமைப்புகள் தேசியஇனப்பிரச்சினை தோன்றிட பார்ப்பனியம்,இந்துமதம் காரணம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...