மார்க்சியத்தை குழப்புவோரிடமிருந்து சரியான மார்க்சிய லெனினியத்தை கற்போம்-சிபி

 மார்க்சியத்தை தங்களின் எண்ணம்போல் எழுதிக் கொண்டே அதை விமர்சனம் செய்வோரை நீங்கள் பேசுவது மார்க்சியமல்ல என்று பொய்யான தகவல்களை தங்களின் எண்ணம்போன்ற போக்கில் நான் பேசுவதுதான் மார்க்சியம் என்று பேசும் மார்க்சியமில்லாத போக்கை அம்பலப் படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதுகிறேன் தோழர்களே.

சந்திரசேகரின் வார்த்தைகளே,"கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கை பற்றியதும் அனைத்தும் மாறிவிடும் என்பதும் ஒரு சட்டம் கொண்டு வந்து அனைத்தையும் மாற்றி விடலாம் என்பது எல்லாம் கருத்து முதல்வாதிகளின் கற்பனையே.,.
ரசியாவில் கூட்டுபண்ணைகள் அமைக்கும் முயற்சியே பெருவாரியாக 1940களில்தான் நிறைவுபெற்றது கூட்டுபண்ணை முறை என்பது சாரத்தில் முதலாளிய உற்பத்தி முறையாகும் என்பதை கடந்த பதிவில் விளக்கி இருப்பேன்.
உண்மை இப்படி இருக்க ரசியாவில் சோசலிச புரட்சி நடந்ததாக நம் மாயாவாத கம்யூனிஸ்டுகள் கதை அளக்கிறார்கள்". இன்னும் முழுமையாக வாசிக்க கீழகாணும் லிங்கில் செல்லவும்.

மேலும் அவரின் பதிவில் வைக்கப் பட்டுள்ள கேள்வி,
வசாய வர்க்கம் குறித்த 22ம்பதிவு.
இந்தியா 1917 ரசியாவை விடவும் ,1949,ன் சீனத்தை விடவும் மிகவும், வளர்ந்த நாடு.
ரசியாவில் 1917ல் வேளாண்மையில் 80% விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட்டு இருந்தனர்,
சீனத்தில் 1949ல் 90% விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்தியாவில் இந்த தொகை பாதியாக குறைந்து இருக்கிறது இந்தியாவில் விவசாயிகளின் தொகை 49% அதாவது 65 கோடி பேர்.
இந்தியாவின் மக்கள் தொகை 2022 கணக்கின் படி 1,417,173,173, இவை 0.68% 2021 விட உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துக் கொண்டேதான் உள்ளது 2021 ல் 1,407,563,842, 2020 ல் 1,396,387,127

அரசின் தொகை 2011 கணக்குபடி 1210854977 குழந்தைகள் 164515253 படித்தவர்கள் 763638812- படிக்காதவர்கள் 447216165 மொத்தம் வேலை செய்பவர்கள் -481888868 ..... இப்படி செல்லும் புள்ளி விவரம் என்னே சொல்கிறது சொல்லுங்கள் நானும் புரிந்துக் கொள்ளதான்.

மேலும் அரசே 2023-24 பட்ஜெட்டில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டின் கீழே வாழ்கின்றனர் என்கின்றனர். அதாவது அதேபோல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 74% மக்கள் கிராமபுறத்தில் வாழ்வதாகவும் அதில் 60% மக்கள் இன்னும் கிராமபுற வாழ்க்கை வாழ்வதாகவும் கண்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக 104 கோடி மக்கள் இன்னும் கிராமபுறத்தில் வாழ்கின்றனர் அதில் 62 கோடி மக்கள் கிராமாந்திர வாழ்க்கை வாழ்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம் படி.

சரி இந்தப் புள்ளி விவரங்களை விடுங்கள் அரசே சொல்லும் 80 கோடி பேர் இந்திய அமைப்பு முறையில் வாழ முடியாதவர்களாக உள்ளனர் அதனை பற்றி விரிவாக பின்னர் பேசுவோம். முதலில் நாட்டு மக்கள் தொகையில் 141 கோடியில் 80 கோடி போய்விட்டால் மீதம் 61 கோடி பேர் மட்டுமே ஏதோவகையில் இந்த நாட்டின் உற்பத்தியில் சுவிகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றால் மிகையல்ல என்பேன்.
அவர்களை பற்றி பேசுவோம் அப்படியெனில் நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதும் நமது ஆய்வுக்கு வேண்டுமல்லவா?

· குறிப்பு:- “முதலாளித்துவம் வளர்ச்சி விவசாயத்தில் துவாகவும் பல வடிவங்களும் நுழைகின்றது மேலும் விவசாயத்தில் முதலாளித்துவம் அதன் தன்மையிலேயே தொழில்துறை போல் சமமாக வளர்ச்சி அடைய முடியாது ஒரு இடத்தில் ஒரு நாட்டில் ஒரு பகுதியில் ஒரு வடிவத்தில் விவசாயத்தில் ஒரு அம்சம் அது முன்னுக்கு எடுத்துச் செல்கிறது” - லெனின் .

· தொழில்துறை முதலாளித்துவம் விவசாயத்துறை முதலாளித்துவம் உள்ள  ஒப்பீட்டு ரீதியான வளர்ச்சியையும் இயங்கியல் உறவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியை  ஆராய முடியும். தொழில்துறை முதலாளித்துவத்தில் வெளிப்படும் தெளிவான வர்க்க ணி சேர்க்கையும் வர்க்க முரண்பாடுகளும் விவசாயத்துறை முதலாளித்துவத்தில் காண்பது இயலாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியான அளவில் தொழில்துறை முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பலம் பலவீனம் உள்வாங்கிக்கொண்டு விவசாயத்துறையில் முதலாளித்துவம் வளரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

· முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது இதற்கு முந்தி எல்லா உற்பத்தி முறைகளில் உயர்ந்த கட்டமாகும். அதுமட்டுமல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மிகவும் சிக்கலான பரிணாமங்களை பல்வேறு விதமான வடிவங்களில் கொண்டதாக  அமைந்திருக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் சீராகவும் ஒரே மாதிரியாக ஒத்த தன்மை உடையதாகவும் அமைந்திருக்க  இயலாது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எளிய மற்றும் நேர்கோடான சூத்திரத்தில் அடக்கிவிட முடியாது. அது இடத்திற்கு இடம் நாட்டிற்கு நாடு காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட வடிவங்களில் கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இட்டுச்செல்லும் வடிவங்கள் பல இருப்பினும் அவை பொதுவாக இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று புரட்சியின் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையை உருவாக்குதல் இந்த வகையான தங்குதடையற்ற முதலாளித்துவ மாற்றங்கள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்தேறின மற்றது மெதுவான படிப்படியான முதலாளித்துவ வளர்ச்சி இது பிரஷ்யன் ஷங்கர் பாணி முதலாளித்துவ வளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரியான முதலாளித்துவ வளர்ச்சி இன்று நமது நாட்டில் நடந்தேறி வருகிறது. தொடரும்

The 2021 Census of India, also the 16th Indian Census, has been postponed till October 2023

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...