மூவர்ண கொடியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றி விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா?

 


மூவர்ண கொடியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றி விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா?

தேசியக்கொடியை DPயில் வை.
ஒவ்வொரு வீட்டிலும் கொடியை பறக்க விடு.
இவை என்ன வகையான கோசங்கள்!!!
75 ஆண்டுகள் ஆகிவிட்டதாம் நாடு சுதந்திரம் அடைந்து.
ஆனால்
உண்மையில் இந்நாட்டில் இன்றுவரை மக்கள் வாழ்வதற்கு வழிவகைதான் இல்லை (இந்தி சேனல்களை காது கொடுத்துகக் கூட கேட்க முடியாத ஆட்சியாளர்களின் பஜனை) எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு பறிக்கப் பட்டு இன்னல்பட்டுக் கொண்டுள்ள மக்கள் ஒருபுறம் உலகமய தனியார்மயத்தால் நாட்டையே கொள்ளை அடிக்கும் கும்பல் இன்னொறுபுறம். வகை வகையான திட்டங்களால் அடிதட்டு மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
படிக்க பள்ளி இல்லை அதுவும் தனியாரிடம்
படித்து விட்டாலும் வேலையில்லை அதுவும் தனியாரிடம்
பள்ளியில்லை கல்வியில்லை ஏன் வேலையும் இல்லை பின் மருத்துவமும் தனியாரிடம் இப்படி எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்து விட்டு மக்கள் மீது வரி போட்டு சுரண்டுவதை மட்டும் மறப்பதில்லை.
அதனை பேசாத தேசிய கொடி பூஜாரிகளாக்கட்டும் அதனை எதிர்க்கும் கருப்பு கொடி ஏமாற்று பேர் வழிகளாகட்டும் அவர்கள் இந்த ஆட்சி அதிகாரத்தை கட்டிக்காக்க தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முனைகின்றனர்.
உண்மையில் இந்த ஆட்சி அதிகாரம் என்பதே முதலாளிகளின் சேவைபுரிவதுதான் அதில் எந்த கட்சியும் விதிவிகல்ல… ஆக இவர்கள் பெரும்பான்மை உழைக்கும் அடிதட்டு ஏழை எளிய மக்களுக்கானவர்கள் இல்லை இந்த ஓட்டரசியல் பச்சோந்திகள் தங்களின் தேவைக்காக யாரையும் பலி கொடுக்க தயங்குவதில்லை இவைதான் 75 ஆண்டுகால இந்திய ஜனநாயகம்.
உண்மையான ஒடுக்கப் பட்ட மக்களின் ஜனநாயகம் இங்கில்லை ஆக அதற்க்கான போராட்டம் மட்டுமே மக்களை இந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும் உழைக்கும் மக்களுக்கான அரசால் மட்டுமே அவை சாத்தியம்.

இதை கண்டு ஒரு தோழர் தந்து வாட்சாப் குழுவிலிருந்து நீக்க சொன்னார்
[7:31 am, 14/08/2022] kravichandran00@gmail com: தோழர் வணக்கம்! இதுபோன்ற அரசியல் பதிவுகளை இங்கு பதிவிடக் கூடாது. கட்சி கட்டுவதில் உள்ள பிரச்சனைகளை பேசுவதற்காக மட்டுமே இக்குழு. அரசியல் பதிவுகள் அனைத்தும் தமிழகப் புரட்சி குழுவில் பதிவிடலாம். இக்குழுவில் உள்ள 87 தோழர்களும் அரசியல் குழுவிலும் இருப்பவர்களே. எனவே அரசியல் பதிவுகள் மீண்டும் இங்குத் தேவையில்லை. இப்பதிவை டெலிட் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். [7:43 am, 14/08/2022] CP: நன்றி தோழர் நீக்கி விட்டேன். அரசியல் என்றால் என்ன தோழர் கொஞ்சம் விளக்கி விட்டல் நானும் புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் தோழர்

புரட்சியை நேசிக்கும் தோழர்களே சிந்திக்க-1

 நமது மார்க்சிய ஆசான்கள் தத்துவம் மட்டும் இன்றி நடைமுறையில் புரட்சியை நடத்தி அதில் ஏற்பட்ட சாதக பாதக நிலைகளை எழுதி வைத்து போயுள்ளனர், இங்குள்ள எந்த கம்யூனிச கட்சியோ மா-லெ இயக்கமோ அவர்களின் பாதையில் பயணிப்பதாக தெரியவில்லை... அதனை பற்றி பிறகு பார்ப்போம்... முதலில் தனது குறைகளை தெரிந்து அதனை நீக்க யாராவது சுயவிமர்சனத்திற்க்கு வந்தார்களா???

++++++++++++++++++++++++++++++++++++++++

மகத்தான போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமை உறுப்புகள் எல்லாவற்றையும், அதன் உறுப்பினர், ஊழியர் அனைவரையும் தமதுமுன்முயற்சியை (முனைப்பை) (initiative) முற்றாக வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. இந்த முன்முயற்சி மட்டுமே வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த முன்முயற்சி தலைமை உறுப்புகளும் ஊழியர்களும் கட்சி அணியினரும் ஆக்கபூர்வமாக வேலை செய்யும் ஆற்றலிலும், பொறுப்புணர்ச்சியிலும், வேலையில் காட்டும் நிரம்பிய சுறுசுறுப்பிலும், கேள்விகள் எழுப்பி அபிப்பிராயங்கள் தெரிவித்துத் தவறுகள் விமர்சனம் செய்யும் துணிவிலும் திறமையிலும், தலைமை உறுப்புகளையும் தலைமை ஊழியர்களையும் தோழமை பூர்வமாகக் கண்காணிப்பதிலும், பருண்மையாகக் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால்முன்முயற்சிஎன்பது வெறும் வாய்ப்பந்தலாகும். ஆனால் இத்தகைய முன்முயற்சியின் பிரயோகம் கட்சி வாழ்வில் பரவியுள்ள ஜனநாயகத்தைச் சார்ந்திருக்கிறது. கட்சி வாழ்வில் போதிய ஜனநாயகம் இல்லாவிட்டால் இதை முற்றாக வெளிப்படுத்த முடியாது.
ஜனநாயக சூழ்நிலையில் தான் பெருந்தொகையான திறமைசாலிகளை வளர்த்தெடுக்க முடியும்.”

(தேசிய யுத்தத்தல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்- அக்டோபர் 1938)
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? : மாஓ சேதுங் (1963 மே)

சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.
அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.
சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.
மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில் இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.
பல வேளைகளில், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.
நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.
எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் செய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.
(தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்டநமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்
மனிதன், தன் அறிதல் அனுபவங்களை முறை பற்றி அறியும்பிரிவே அறிவியல் என்பதாகும். தன் உணர்தல்அநுபவங்களைமுறைப்படுத்தி ஆராயும்பிரிவே கலை என்பதாகும். சிந்தனனக்கும் உணர்தலுக்கும்இடையிலானவேறுபாட்டையே, அறிதலும், உணர்தலும் தெளிவாக்குகிறது.
புரதானகாலசமுதாயத்தில்,அறிவியலும் கிடையாது கலையும் கிடையாது. மந்திரம் மட்டுமே இருந்தது. நாம் இப்போது அறிந்திருக்கிற அறிவியலும் கலையும்,
சரக்கு உற்பத்திமுறையின் வளர்ச்சிக்குப்பின்னரும்
மன உழைப்பு உடல் உழைப்பு ஆகிய வற்றுக்குஇடையிலான
முரண்பாட்டின்வளர்ச்சிக்குப்பின்னரும்,சமூகம் வர்க்கங்களாகப் பிரிவுண்டப்பின்னரும்வளர்ந்ததுறைகள் ஆகும் .(நூல்:மனிதசமூகசாரம்.
ஜார்ஜ்தாம்சன்).
5.
குறுங்குழுவாதம்
*
எல்லா குறுங்குழுவாதப் போக்குகளும் அகவய வாதமே!*
மாவோ

கட்சி பள்ளி தொடங்கிவைத்து தோழர் மா.வோ. பெரும்பாலான நமது தோழர்கள் கட்சி சாராத மக்கள் மீது கர்வப் போக்கு உடையவர்களாக, இகழ்ச்சியாக அவர்களை பார்ப்பவர்களாக, அவர்களை வெறுக்கவோ, அல்லது மறுக்கவோ அல்லது அவர்களின் நல்ல அம்சங்களை கவனிக்காமல் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இது உண்மையில் குறுங்குழுவாத போக்கு ஆகும். சில மார்க்சிய புத்தகங்கள் படித்த பின்னால், அடக்கத்திற்கு மாறாக அகந்தையுள்ளவர்களாக மாறுகின்றனர். தங்கள் அறிவு அரை குறையானது என்ற உண்மையை உணராமல் மற்றவர்களை பயனற்றவர்கள் என்று ஒதுக்கி விடுகின்றனர். எந்த சமயத்திலும் கட்சி சாராத மக்களிடம் ஒப்பிடும்போது நாம் சிறுபான்மையினர்தான் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு நூறு நபருக்கு ஒரு பொதுவுடமை வாதி வீதம் இருந்தால் 45 கோடி மக்களுக்கு, 45 இலட்சம் பொதுவுடமை வதிகள் இருக்கவேண்டும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நமது கட்சி அடைந்தாலும் கூட மக்கள் தொகையில் நாம் ஒரு சதவீதம் இருப்போம் கட்சி சாராத மக்கள் 99 சதவீதம் இருப்பார்கள். கட்சி சாராத மக்களிடம் நாம் இணையாமல் இருப்பதற்கு காரணமென்ன? நம்முடன் இணைய விரும்புகிறவர்கள் அல்லது இணையப் போகிறவர்களை பொறுத்த மட்டில் நமது ஒரே வேலை அவர்களோடு ஒத்துழைப்பது தான். அவர்களை புறக்கனிப்பதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை ஆனால் சில தோழர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் நம்முடன் ஒத்துழைப்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் அல்லது அவர்களை புறக்கணிக்கிறார்கள். இம்மாதிரி செயல்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் ஏதாவது நியாயங்களை கொடுத்துள்ளனரா? இல்லை. மாறாக, அவர்கள் மக்களுடன் இணைவதற்கு நம்மை ஊக்கப் படுத்தியுள்ளனர். மக்களிடமிருந்து நாம் விலகுவதை அல்ல. சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டி ஏதாவது நியாயங்கள் தந்துள்ளதா? இல்லை. அதன் எல்லாத் தீர்மானங்களிலும் மக்களிடமிருந்து நம்மை விலக்கி தனிமைப் படுத்தும்எந்த ஒரு தீர்மான வாசகமும் இல்லை அதற்கு மாறாக மக்களுடன் நெருங்கிய உறவு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடமிருந்து நம்மை பிரிக்கும் எட்த ஒரு செயலுக்கும் எந்த நியாயமும் இல்லை. சில தோழர்களின் திட்டமிட்ட குறுங்குழுவாத சிந்தனையின் விளவுதான் இது. இம் மாதிரியான குறுங்குழுவாதப் போக்கு நம் தோழர்களில் சிலரிடையே அதிக அளவு உள்லது. அது நம் கட்சி வழியை தடுத்து வருகிறது. இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள நம் பரந்த அளவிற்கு கட்சிக் கல்வியை எடுத்துச்செல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை - கட்சிசாராத மக்களுடனும், ஊழியர்களுடனும், இணையாமல் நாம் எதிரியை வெல்வதோ புரட்சியின் இலட்சியத்தை அடைவதோ சாத்யமில்லை - என்பதை உண்மையோடு நமது கட்சி ஊழியர்களுக்கு உணர்த்த வேண்டும். எல்லா குறுங்கூவாதப் போக்குகளும் அகவய வாதமே புரட்சியின் உண்மையான தேவைகளுடன் பொருந்தாது ஒன்று. ஆகவே அகவயவாதத்திற்கும், குறுங்குழுவாதத்திறும் எதிராக ஒரே சமயத்தில் போர் தொடுக்க வேண்டும்.
மாவோ.

6 . “மக்களிடமிருந்து மக்களுகேஅதாவது மக்களிட்மிருந்து கற்றுக் கொள்வதும் மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்.

7. மக்கள் மீது எந்த ஒரு கண்ணோட்டத்தையும் அது எவ்வள்வு சரியாக் இருந்தாலும் சரி- தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திணிக்கக் கூடாது, இது அதிகார் வர்க்க போக்கு.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...