மக்களின் கல்விக்கு லெனின்-நமது சமுதாயத்தில் கல்வி


 மாபெரும் சோசலிச அக்டோபர் புரட்சிக்கு பல காலம் முன்னதாகவே பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவு புகட்டவும்  அரசியல் ரீதியாக போதனை பெறவும் லெனின் தலைமையில் தொடர்ந்து போராடியது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலாச்சாரத்தை கல்வியையும் சாதாரண பொதுமக்களும் எளிதில் பெறக்கூடிய அமைப்பு கொண்ட சோசலிச சமுதாயமாக முதலாளித்துவச் சமுதாயத்தை மாற்றுவதற்கும் பாட்டாளிகளை ஆயத்தம் செய்ய வேண்டுவது ஓர் இன்றியமையாத நிலை என்பது இதில் கண்டது .

மக்களின் கல்விக்கு லெனின் எல்லாவற்றிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தார் சமுதாய வளர்ச்சியில் இந்த அல்லது அந்த கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் கடமைகள் சம்பந்தப்பட்ட போதனைகள் அவர்களது கல்வி பயிற்றுவிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றில் லெனின் கவனம் செலுத்தினார் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜார் ஆட்சி நிலைமைகளில் பாட்டாளிகளிடம் முன்னேற்றமான வர்க்க விழிப்புணர்வை வளர்க்கும் பணிகளுடன் லெனின் இணைத்தார் .

சர்வாதிகாரத்தை எதிர்த்து புரட்சிகரமாக போராடாமல் நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோரின் ஆட்சி தூக்கி எறியாமலும் பொதுக் கல்வியை அடிப்படையாக மாற்றி அமைப்பது இயலாது என்ற கருத்திற்கு ருஷ்ய பாட்டாளிகளை லெனின் தட்டி எழுப்பினார் .

வர்க்க சமூக சமுதாயத்தில் கல்வியின் வர்க்கத் தன்மையை பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் தெளிவாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாதாரண பொதுமக்கள் அறிவு பெறும் வழியை ருஷ்ய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் இந்த நிதர்சனப்படுத்தி விளக்கினார் .நமது அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார் (1895):"அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார் ;இந்த தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வேட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக முக்கியமாகும் திரும்பிவிடும் என்று அமைச்சர் நன்கு புரிந்து இருந்தார் ".

வர்க்க சமுதாயத்திலான கல்வியை கலாச்சாரத்தை மற்றும் கல்விக் கூடத்தில் வர்க்கத் தன்மையை மறைக்க முயன்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள் திருத்தல்வாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக புரட்சி இயக்க வளர்ச்சியில் எல்லா கட்டத்திலும் லெனின் உறுதியாக முன்வைத்தார்.

மகத்தான சோசலிசப் புரட்சி ஆனது ஆளும் வர்க்க ஒடுக்குவோருக்கான கல்வி என்பதை தனி சலுகையை முடிவு கட்டியது விஞ்ஞான கலாச்சார கலை சாதனைகள் அனைத்தையும் வெகுஜனங்கள் எளிதில் பெறக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தது .

சமுதாய புரட்சியானது கலாச்சாரப் புரட்சிக் ஓர் இன்றியமையாத முன் நிபந்தனையாகும் என்று லெனின் கருதினார். முதலாளித்துவ சமுதாய நிலைமைகளில் முதலாளித்துவத்தில் இருந்து இதற்கான மாற்றத்தை அமைதியான வழியில் மட்டுமே செய்து முடிக்க முடியும் எனவும் உற்பத்தி சக்திகளும் கலாச்சாரம் ஒரு நிச்சயமான வளர்ச்சி கட்டத்தை அடைந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் எல்லா சீர்திருத்தவாதிகளும் வெளியிட்ட துணிபு ரகளை லெனின் கடுமையாக விமர்சித்தார் நமது புரட்சி என்ற கட்டுரையில் அந்த கருத்து நிலையை விரிவாக விளக்கி, "சோசலிசத்தை கட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் தேவை என்றால் அந்த குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கு தேவையான முன் தேவைகளை புரட்சிகரமான வழியில் முதலில் அடைவதன் மூலம் எனவே நாம் ஆரம்பிக்க கூடாது ".(Lenin selected works volume 33 pp.478-79).

கலாச்சாரப் புரட்சியின் வெற்றி சாதனை ஒரு நாளில் பெறக்கூடிய விஷயமல்ல அது நீடித்த நடைபெற நடைமுறை விசியம்  ஆகும் என்பதனை லெனின் அறிவுறுத்தினார்.   செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் சர்வப் பொதுவான முறையில் கல்வி அளிப்பது,  எல்லா தேசிய இனங்களையும் சார்ந்த உழைக்கும் மக்களின் கலாச்சார தரத்தை உயர்த்துவது உண்மையான ஒரு மக்கள் அறிவுஜீவிகள் பகுதியை உருவாக்குவது ஆகியவை அதன் முக்கியமான பணிகள் ஆகும்.

பழைய பள்ளி கல்வி முறையை விமர்சிக்கும் போது அது "உண்மையான கம்யூனிஸ்ட் கல்விக்கான " பள்ளியாக அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று லெனின் கூறினார் .பழைய கல்விகளில் பேராதிக்கம் செலுத்தி வந்த மனப்பாடம்  போடும் பழக்கத்தை உறுதியாக கண்டித்த லெனின் " நன்கு கற்ற இன்றைய மனிதனுக்கு இன்றியமையாத எல்லா  விவரங்களும் அடங்கிய அறிவை" ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து அதில் பரிபூரண அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார் .உயர்ந்த கல்வி உடையவர்களாக உயர்ந்த பண்பாடு உடையவர்கள் உயர்ந்த கோட்பாடு உடையவர்களாக கம்யூனிசத்தை கட்டுவதற்கு மனிதனும் இனம் சேகரித்த அறிவை பயன்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக,  இளைஞர்களை உருவாக்கும் அடிப்படையில் பொதுக் கல்வியை பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது லெனின்னுடைய கருத்து . 

கல்வி இடம் புதிய கடமைகளை நம்முடைய காலம் எதிர்பார்க்கிறது சமுதாய உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்யவும் மேலும் விஞ்ஞான தொழில் நுணுக்க முன்னேற்றத்தை உறுதி செய்யும் விஞ்ஞான ரீதியில் முன் முறைப்படுத்தப்பட்ட உழைப்பை பயன்படுத்தி அதனுடைய உற்பத்தி திறனை மேலும் மேலும் உயர்த்தவும் அறிவை சுயேட்சையாக பெற்று அதனை நடைமுறையில் பயன்படுத்தி தங்களை முழுமையாக தயார் செய்து கொண்ட மக்கள் தேவை .(பொதுக்கல்வி பற்றி லெனினுடைய நூலின் முன்னுரையில் இருந்து சுருக்கம் என்னுடையவை) .

நமது கல்வி முறையும் இந்திய சமூகம் 

தற்போது நமது நாட்டில் சமூக அரசியல் சூழ்நிலையில் புதிய அம்சம் என்னவென்றால் பெரும் முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தை அன்னிய நிதி மூலதனத்துடன் சேர்ந்து நாடு முழுவதிலும் பொருளாதார வாழ்வை ஏகபோகமாக்க முயற்சித்துக் கொண்டு உள்ளது . இங்கே அரசின் அமைப்பிலும் மாற்றம் கொண்டுவர அவர்கள் விரும்புகின்றனர் .எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்து அதாவது ஒரு கட்சி ஆட்சிக்காக பாசிச நிலையில் முன்னேறிக் கொண்டுள்ளது. 

ஆளும் கும்பலுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவே ஏற்கனவே நிலவுகின்ற சில உரிமைகளையும் பறிக்கிறது முன் கண்டிராத அளவிற்கு கருப்பு சட்டங்களால் தன்னை ஆயுதபாணி ஆக்கிக் கொள்கிறது.

இன்றைய பாசிச நிலையில் நமது கல்விக் கொள்கையும் மக்கள் மீது திணிக்கப்படும் பல்வேறுவிதமான கருத்தாக்கங்களின் புரிந்து கொள்வதற்காக கல்வி பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் செல்வோம்.

இன்றைய சமூக அமைப்பில் இருக்கும் "கல்வி எல்லோருமானது" என்பதும் "எல்லா மக்களின் நலனை கருத்தில் கொண்டு" உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை; எப்படியெனில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி என்று எல்லா துறைகளிலும் ஒடுக்குமுறைகளை கையாளும் சமூகத்தில் கல்வி மட்டும் எப்படி வர்க்க சார்பற்றதாக இருக்க முடியும் அதனை பற்றிய தேடுதலே இன்றைய கிளப் அவுஸின் முதன்மையான நோக்கம் .

இந்திய கல்வின் தோற்றம் பற்றி ஒரு தேடுதல் 

இந்தியப் பகுதிகள் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது கல்வியானது அன்றைய சமூக அமைப்பில் ஜாதியின் அடிப்படையில் இருந்தது. அதில் குறிப்பாக அவர்களின் தொழில் சார்ந்த கல்வியாக இருந்தது பார்ப்பனர்கள் சாஸ்திரங்களை கற்பதும் வணிகர்கள் வணிகத்திற்கான கல்வி கற்பதும் நிலவுடைமை சமூகத்தில் நிலம் சார்ந்த முறையில் அவரவர்களுக்கான கல்விகள்  கற்பிக்கப்பட்டன .

உடல் உழைப்பால் ஈடுபட்ட பெரும் பகுதி மக்கள் கல்வி இன்றி வெறும் கூலிகளாக ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கல்வியற்ற கூட்டமாக தான் வாழ்ந்தனர்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் 1813ல் அக்கால வணிக நிறுவனங்களின் தேவைகளுக்காக  முறைசார் கல்வி முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அந்தத் தேவைகளான ..

1).அரசு நிர்வாக தேவை 

2).அரசியல் தேவை

 3). பண்பாட்டுத் தேவை 

இந்த தேவைகளுக்காக பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்ய இயலாது.

ஒரு அடிமை நாட்டை நிர்வாக முறைகளை அதுவரை இருந்தது போல் அல்லாமல் மாற்றிவிட்டன . எப்பொழுதும் "வெறும் வாள் கொண்டு அதாவது ஆயுத அடக்குமுறையின் மூலம் மட்டுமே ஒரு நாட்டை அடக்கி விட இயலாது" என்பதை புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அதற்கான பணியினை மிகத் தெளிவாக செய்தனர் என்றால் மிகையன்று. இந்திய பகுதிக்குள் தம்மை என்றும் ஆதரிக்கக் கூடிய சக்திகளை தயாரிக்கும் தேவை ஏற்பட்டது .இந்தியப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிருப்தியுறாதவகையில் வழங்கி எதிர்தரப்பு தனக்கு எதிராக போகாத வகையில் உரிய சேவை செய்தது இந்த கல்விமுறை.

எல்லோருக்குமான கல்வி என்பதோடு  மதம் சாரா கல்வியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது இருந்தும் சில விதிவிலக்குகள் செயல்பட்டது.

அதேபோன்று "எல்லோருக்குமான கல்வி" என்று அறிவிக்கப்பட்டாலும் "எல்லோரும் படிப்பதற்கான சூழல் சமூக நிலையிலிருந்து உருவாக்கப்படவில்லை".  ஆக எல்லோருக்குமான கல்வி என்பது கொள்கை முடிவு தானே தவிர நடைமுறை திட்டமாக அமலுக்கு வரவில்லை. 1854 ல் உட்(Wood) என்ற ஆங்கிலேய அதிகாரி தன் குறிப்பில் எழுதுகின்றார். கிழக்கிந்திய வணிக நிறுவனத்துக்கு சேவை செய்யக்கூடிய நம்பகமானதும் திறமையான ஊழியர்களை வழங்கக்கூடிய தேவை கல்விக்கு உள்ளது. இதைத்தான் மெக்காலே கல்வியின் விருப்பத்தை நினைவுபடுத்துகிறது . உடல் அளவில் இந்தியர்களாகவும் சிந்தனை அளவில் ஆங்கிலேயர்களாகவும் தம்மை நினைத்துக்கொள்ளும் ஒரு பிரிவை ஏற்படுத்தும் தேவையுள்ளது என்று 1835 ல் மெக்காலே கூறியது நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக,அரசு, சட்டம், கல்வி, மதம், கலை இலக்கியம் இவையாவும் மேல்மட்ட அமைப்பை சார்ந்தவையே புரட்சி என்பது அரசு இயந்திரத்தின் மீது கை வைப்பதில்லை அதை உடைத் தெரிவதாகவும் என்று லெனின் கூறினார் அவர் கூறியது அரசு இயந்திரத்துக்கு மட்டுமல்ல மற்றும் மேல்மட்ட அமைப்புகளுக்கும் பொருந்தியதாகும் .

இன்றைய முதலாளித்துவ அரசமைப்பை தெய்வம் போல தொழுவது போலவே சட்டங்கள், கல்வி, மதம், மற்றும் கலை இலக்கியங்கள் ஆகியவற்றில் பரிசுத்தமாக பலர் தொழுகின்றனர்.

இன்றைய அரசியலமைப்பு சட்டங்கள் யாவும் பூர்ஷ்வா வர்க்கத்தின் அவர்களது தனிச்சொத்துடைமையையும் பாதுகாக்கப்பதற்காகவே உருவாக்கபட்டுள்ளன. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சிறைச்சாலைக்குள் இன்றைய சட்டங்கள் நிறைத்து வைத்துள்ளன .

இன்றைய கல்வியானது முதலாளி வர்க்கத்துக்கு தேவையான கூலி அடிமைகளை உருவாக்குவதற்காக ஏற்பட்டுள்ளதே இதன் மேல் மக்கள் கொண்டிருக்கும் மயக்கம் சொல்ல முடியாததாகும். தன் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையலாம் என்று அவர் தம் பெற்றோர்கள் எண்ணுகின்றனர். தமது உற்பத்தி உறவில் இருந்து பிரித்து தனது உழைப்பைச் செலவிட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர் அங்கு சரியான அறிவு உற்பத்தியில் ஈடுபட கல்வியை அரசு அளிப்பதில்லை.

கூலி அடிமை சந்தைக்கு பிள்ளைகளை தயாரிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் வேலையற்றவர்களாக இன்றை நிலையில் தெருவில் நிற்கின்றனர் தமது பெற்றோரின் உற்பத்தி உறவிலும் ஈடுபடவும் தயங்குகின்ற இந்த கல்விமுறை உடைத்தெறியப் படவேண்டிய அவசியமானது.

மதம் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவே நிலவுடைமை சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பொய்மை வழிபாடு ஆகும். இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை நமக்கு மார்க்ஸ் தெளிவாக தந்துள்ளார் .

மத உணர்வுகளை புண்படுத்தும் மூலம் மத கேடுகளை எதிர்த்து போரிட்டு வெற்றி காண முடியாது என்று லெனின் கூறினார். ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை பரப்புவதும் மூலமே மத ஆதிக்கத்தை உடைத்தெறிய முடியும் .

முதலாளித்துவத்தின் விற்பனைப் பொருளாக வர்க்க அமைப்பின் பாதுகாவலனாக பேணப்பட்டு வரும் கலை இலக்கியங்கள் யாவும் கூட உடைத்தெறிய படவேண்டியது ஆகும். இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் உலகமயமாக்கலில் பொய்மையை கலை இலக்கியம் இன்று எங்கும் ஏகாதிபத்திய சார்பு நாடுகளில் விதைத்துக் கொண்டுள்ளது . குறிப்பாக தமிழக சூழலில் இன்று சினிமா துறையானது அரசியல் ஆதிக்கம் பெற்று வருவதை காணலாம். மதம் போலவே தெய்வ வழிபாடு போலவே சினிமா நடிகர்கள் போற்றப்பட்டு அரசியலில் முன்னுக்கு வைக்கப்படுகின்றனர் இந்த மாயைகள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டியது அவசியமாகும்.

மேல் கட்டுமானம் அனைத்தும் பொருளாதாரம் என்ற அடித்தளத்திற்க்கு சேவை செய்பவை ஆகும் இவற்றில் அரசியல் முதன்மை வகித்த போதும் அது போலவே பிற மேல்மட்ட அமைப்புகளும் அதற்கு பக்கபலமாக நின்று அடிப்படை அமைப்பை கட்டிக்காப்பதேயாகும். ஆக கல்வி பற்றி சற்று ஆய்ந்தறிவோம் தோழர்களே.

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?

இன்றுள்ள குழந்தைகளானது 98% கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் கொண்டதாகவும் அதே வளர்ந்து கல்வி கற்று கல்வி நிலையங்களை விட்டு வெளியேறியப் பின் 2% மட்டுமே கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் உள்ளதாக ஒரு ஆய்வரிக்கை தெரிவிக்கிறது இதிலிரிந்து நமது கல்வி முறையானது சிந்திக்கும் திறனை அடியோடு ஒழித்துக் கட்ட முனைகிறது என்பதுதானே அதனை பற்றி தொடர்ந்து விவாதிப்பதே இந்த பகுதியின் நோக்கம்.

அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.

இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது.

ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்படையில் கற்ப்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது..

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே.

இவை சமுக அறிவோ அல்லது அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லாத வெறும் கருத்து முதல்வாதிகளாகவும்,

சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது.

இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே போல் இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

சிந்தனை முறையில் இவர்களுக்கு தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை.

முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால்

இன்றோ உலகமய, தனியார்மயக் கொள்கையால் கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அப்படியே படித்து விட்டாலும் அவை சார்ந்த வேலை இல்லை.

உலகமய, தனியார்மயக்கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மதவாதிகளின் ஆட்சியில் பகுத்தறிவாதிகள் நாத்திகவாதத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கின்றனர் (இவை மக்களை அணுகி உள்ளதா என்பதனை பின் பார்ப்போம்) மதவாதிகளோ மக்களிடம் மண்டிக்கிடக்கும் பழைமைவாதம் மற்றும் மதம் சார்ந்த சிந்தனையை விதைத்து அறுவடை செய்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய உலக மயம் தனியார் மய சூழலில் எல்லாம் லாபம் கொழிக்கும் தொழிலாகி போயுள்ள போது நாம் எங்கெ தேடுவது தரமான கல்வியை.

உலக மயமாக்கலுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக நீயுக்கிளியர் குடும்பங்களாக உள்ள சூழலில் குழந்தை வளர்ப்பு என்பதே பெற்றோருக்கு பெரும் பாரமாகி உள்ளது.கடன்பட்டாவது தன் குழந்தையை எப்படியேனும் ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் அவை விளம்பரத்தில் முன்னணியில் உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் இப்படிதான் இன்றைய கல்வியின் டெரண்ட்..

அப்படிபட்ட அந்தப் பள்ளியில் சேரும் பிள்ளை வீட்டிலும் பள்ளியிலும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டால் பதிலளிக்க முடியாத பள்ளி, பதிலளிக்க நேரமில்லாத குடும்பம், இப்படி சிந்தனை முடக்கப் பட்டு கேள்விக்கு பதிலளிக்க திறனற்ற பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் ஆயுதம் ஒடுக்குமுறை அடி உதை குழந்தைகள் ஒருமுறையில் அடங்கி ஒடுங்கி அடிமைதனத்திற்க்கு பயிற்றுவிக்கும் இடமாக பள்ளி இருக்கிறது.

அப்படியே படித்து முடித்து தன் கல்விக்கான வேலை கிடைக்கிறாதா என்றால் இல்லை ஏனெனில் இவை திட்டமிடப்பட்ட கல்வி முறை இல்லை அவர்களுக்கு காசு கொழிக்கும் கல்விகளை சந்தையில் விற்பனை செய்கின்றனர், காசு கொடுத்து வாங்கும் மக்கள் தலையிலே அரசும் திணித்து விடுகிறது. கல்வியை கொடுக்காத அரசு வேலையையும் கொடுக்க முன் வரவில்லை, ஏனெனில் அதற்க்கான திட்டமிடல் அரசிடம் இல்லை.

ஆக இந்த கல்வியால் அந்த மாணவன் கற்றவை என்ன? தன் வாழ்க்கைகான கல்வியாக ஏன் இல்லை என்று அவன் சிந்திக்கும் அளவிற்க்கு அவனை ஏன் வளர்க்கவில்லை என்பதே என் கேள்வி.

கல்வி முடிந்து வேலை தேடும் பட்டாளம் சந்தையில் பெருகிக் கொண்டே உள்ளது அவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன.

ஆனால் இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது வேலை அல்ல ஒடுக்குமுறை மட்டுமே.

இந்த ஒடுக்குமுறை முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிகமாக தள்ளிப் போகும், இருந்தும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது. அவை நீருபூத்த நெருப்பாக எப்பொழுதும் இருக்கும் அதனை புரிந்து செயல் பட வேண்டியவர்கள் செயல்படல் வேண்டும்.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும்.

சமூக அறிவியல் பூர்வமான சிந்தனை செயல் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் மக்களுக்கான கல்வி ஒரு பொதுவுடைமை சமூக அமைப்பில் மட்டுனே சாத்தியம்…..

நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிர்ச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும், ஆக ஜாதியை பற்றி புரிந்துக் கொள்ள அதன் பல உடன்பிறப்புகளையும் அறிந்தே செல்வோமே என்ற ஒரு தேடுதல் இவை.

காலனி ஆதிக்கவாதிகளின் கருத்துக்களும் பங்கும்

கல்விக் கற்றறிதவர்கள் தங்கள் நாட்டின் மரபுவழி வரலாற்றை கையால் எழுதப்பட்ட இதிகாசங்கள் புராணங்கள் வாழ்க்கை வரலாறு எனும் வடிவத்தில் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் பண்டைய கால இந்திய வரலாறு குறித்த தற்கால ஆராய்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாயிற்று.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலனி ஆதிக்க நிர்வாகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த ஆய்வு தொடங்கியது 1765 இல் வங்காளதிலும் பீகாரிலும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தபோது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது கண்டனர்.

எனவே அந்நாட்களில் மிகவும் அதிகார உரிமை படுவதாக கருதப் பட்ட மனுதர்மத்தில் உள்ள கருத்துகளை பிரிட்டிஷ் தங்களின் நலனுக்காக 1776 இந்து சட்டத் தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் . இதன் மூலம் பிரிட்டிஷ்சார் இந்துக்களின் சிவில் சட்டங்களை செயல்படுவதுவதற்க்கு இந்து சமய சாஸ்திர வல்லுனர்களையும் பண்டிதர்களும் பயன்படுத்தியது போன்றே முஸ்லிம் சட்டங்களை செயல்படுத்துவதில் மௌலிகளை பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர்.

பண்டைய சட்டங்களையும் பழக்கவழக்கங்களில் புரிந்து கொள்ளும் ஆரம்பகால முயற்சிகள் அனேகமாக 18-ம் நூற்றாண்டு வரை நீடித்தன.

இதன் விளைவாக 1776 கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரி தான் அந்த கழகத்தை நிறுவியவர்.

1785 ல் வில்கின்சால் பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

1823 ல் லண்டனில் பிரிட்டிஷ் ஆசியக் கழகம் உருவாக்கப்பட்டது. தொடக்க காலத்தில் ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தையும் ஈரானிய மொழியையும் பெரிதும் ஒத்திருந்தன என்று ஐரோப்பிய நாடுகளை இந்தியாவின் மீது பல கருத்துகளை இது தூண்டி பல வேலைகளை செய்தது.

இந்தியவியல் ஆராய்ச்சிக்கு மிகப்பெரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் ஜெர்மன் அறிஞரான மாக்ஸ் முல்லர் ஆவர். அவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இங்கிலாந்தில் கழித்தார். 1857 ஆம் வருடம் இந்திய எழுச்சி பிரிட்டிசு பல உண்மையை உணர்த்துவதாக இருந்தது. ஆகையால் தங்களுக்காக வேண்டிய இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை சமூக அமைப்புகள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொள்ள மிக மிக அவசியம் என்பது பிரிட்டனுக்கு பெரிதும் உணரப்பட்டது. இதேபோன்று கிறிஸ்தவ மதத்துக்கு பல ஹிந்துக்களை ஈர்க்கும் பொருட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்து சமயத்திலுள்ள பலவீனமான பகுதிகளை கண்டறிய கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் விரும்பினார்கள்.

இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே மாக்ஸ் முல்லரை கொண்டு பண்டைய இந்து சமய நூல்கள் பிரம்மாண்ட அளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .

இரத்தின சுருக்கமாக கூறினால் இந்திய வரலாறு குறித்த பிரிட்டிஷ் கண்ணோட்டங்கள் இந்திய குணநலன் வெளிப்படுத்தவும் இந்திய சாதனைகளைச் இழிவுபடுத்தவும் காலனி ஆதிக்க ஆட்சி நியாயப்படுத்தும் ஆக இருந்தன.

இதில் முக்கியமாக வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் எழுதிய இந்தியாவின் ஆரம்ப கால வரலாறு என்ற நூல்.

இவைதான் பண்டைய கால பல்வேறு விதமான கருத்தாக்கங்களை உருவாக்கிய ஏகாதிபத்திய ஆதரவு தன்மை கொண்டதாகவும் இன்றும் பல அதிகார வர்க்கத்தில் உள்ளோர் வாசிக்கும் நூலாக அவை கொண்டுள்ளது என்றால் மிகையன்று.

(ஆதாரம் பண்டைய கால இந்திய ஆர்எஸ் சர்மா பக்கம் 8 லிருந்து 11 வரை சுருக்கம் மாற்றம் என்னுடையவை)

பள்ளிப் பாடம் என்பது ஒருவித சிந்தனையற்ற மனனம் செய்து ஒப்புவிக்கும் முறையே, இதில் தேர்ச்சி என்பது புத்தக புழுக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே, இங்கே சிந்தனை எங்கேயும் தேவையின்றி ஒரு நடமாடும் எந்திரமாக்கும் வேலையை செய்கிறது இந்தக் கல்வி முறை. ஆகவே இங்குள்ள சமூக சிக்கலுக்கு காரமாண பல்வேறு பிர்ச்சினை குறித்து நமது கல்விமுறையில் எங்கேயும் போதுப்பதில்லை... இந்த வாழ்க்கை பாடம் அனைவ்ரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாயினும் ஏன் நம்க்கு போதிப்பதில்லை? நாம் சிந்தனை அற்ற மூடர்களாக ஆளும் வர்க்க அடிமைகளாக வாழ சொல்கிறது இந்தக் கல்விமுறை..

இதனை நாம் நமது கல்விமுறையில் இருந்து இனம் கண்டால் நலம்

வெறும் புத்தகக் கல்வியால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் கிடைத்துவிடும் என்று போட்டா போட்டி எங்கும் நீக்கம் மற நிறைந்துள்ளவைதானே. இன்றைய உலகமய தனியார்மய தாராள மய கொள்கையால் அரசு தனது பணியை தனியாருக்கு கொடுத்துவிட்டது. இன்று பெரிய சுரண்டும் இயந்திரங்களாக வளர்ந்து வருகின்றன, இன்று இலவசக் கல்வி என்பது கேலிக் கூத்தாகி வருகிறது.

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே சமுக அறிவோ அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை அற்ற வெறும் கருத்து முதல்வாதிகளாக சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது. இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

மேல் படிப்புக்கு பல போட்டிகள் நடத்தப் படுகின்றன இப்போட்டிப் படிப்பில் தேர்ச்சிஅடைந்த போதும் பல்கலைக் கழகப் படிப்பிற்கு நுழைய அவர்கள் பெரும் பொருள் செலவுக்கு பின்னரே கல்விக் கற்க்கின்றனர். இதில் சேர முடியாத மற்றவர்கள் குறைந்த கூலிச் சந்தையில் தள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே கூலிச்சந்தை நிரம்பி வழிகிறது. இதற்கு மேலும் மேலும் ஆண்டுதோறும் இந்த கூலியடிமைச் சந்தைக்கு படித்தவர் அனுப்பப்படுகின்றனர். இதுவே பெரிய வியப்பான செய்தியாகும்.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுவதுண்டு. இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன சிந்தனை முறையில் தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை. முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள் முரண்பாடு எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அதுவே அவ்வமைப்பை உடைத்தும் விடுகிறது.

கல்வி முடிந்து கூலியடிமைத் தொழிலை பெறமுடியாது சந்தையில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண் பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன. இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது ஒடுக்குமுறை மட்டுமே முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிக ஒடுக்கு முறையால் தள்ளிப் போகும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே தேசிய புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும் ... இன்னும் வரும். சிபி.

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?

அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.

இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்ப்டையில் கற்ப்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது.

வகுப்பிலே ஒழுங்கு முறைகளைச் சிறிது மீறிச் சத்தம் போட்டாலோ, குழப்படி செய்தாலோ தண்டிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள். மேசை மேல் வகுப்பு முடியும் வரை நிற்கச் செய்கிறார்கள். பள்ளி முடிந்த பின்னரும் தண்டனை தருகிறார்கள். சில வகுப்புகளில் குற்றத்திற்குப் பணமாகவும் வாங்குகிறார்கள். பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்து மாணவர் முன்னிலையில் தண்டனையளிக்கின்றனர். பள்ளியிவிருந்து சில வேளை வெளியேற்றியும் விடுகின்றனர். பள்ளிகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்கப்படுகிறது.

இவற்றை எதிர்த்து மாணவர்கள் போராடுவதில்லை எவரும் எதிர்க்காது கீழ்ப்படிகின்றனர் என்பதனை அறிவோமா?.

பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.

மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும்! இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள்ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய விதி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன என்று கூறினேன்.

இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழிலாளர், அரசு ஊழியர்கள் இன்று தனியார்துறையையும் கணக்கில் கொள்வோம்.

மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.

மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர்.

பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், இன்னும் பிற... என்றெல்லாம் மாணவரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிறார்களல்லவா? இவர்களும் அரசுயந்திரத்தின் பொம்மைகளே.

இன்றைய சமுக அமைப்பு இருக்கும் வரை இளம் வயதில் மாணவர்களே அடக்கி ஒடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்

நமது கல்வியை குழிதோண்டி புதைக்க நினைக்கும் அரசும் அதன் கொள்கையும்!!!- சி.ப

எங்கே ஓடி கொண்டிருக்கிறோம், நம் சமுதாயம் எப்படியெல்லாம் நஞ்சாகி கொண்டிருக்கின்றது, நேற்று ஆங்கிலேயன் எப்படி இந்திய மக்களை அடிமையாக்கினான் என்பதனை அறிந்தவையே இருந்தாலும் இன்றைய கல்வி கொள்கை எப்படி உள்ளது என்பதனை அறியுமுன் இந்த அரசு மக்களுக்கான அடிப்படையான கல்வி வழங்காமல் தட்டி கழிப்பதை எப்படி ஏற்க்க முடியும்!! தற்போது தமிழ் இந்துவிலும் பல ஊடகங்களும் அவர்கள் வசதிக்கேற்ப்ப எழுதி கொண்டிருக்கும்போது, நாம் சிறிது அலசுவோமா?

அமெரிக்காவின் உலக கொள்ளையின் அடிப்படையில் ஏற்படுத்தபட்ட, “ஏகாத்தியபத்திய சுரண்டலுக்காக,” பல்வேறு முறையில் உலக நாடுகளை அடிமைபடுத்த கொண்டிருந்த கொள்கையில் ஒன்று மக்களின் அடிப்படை கல்வியை பறிப்பது அதாவது சிந்தனையை சிதைப்பது,”மக்களை சிந்திக்காத தனக்கான (அமெரிக்க ஏகாத்தியபத்திய) தேவையை சரியாக நடத்தி முடிக்கும் அடிமை கூட்டம் மட்டுமே தேவையாக்க தகுதியான கல்வி மட்டுமே அளித்து ஒரு சிந்தனை அற்ற கூட்டத்தை உருவாக்குவதே ஆகும்”. இனி மக்களுக்கான் கல்வியை கைவிட்ட அரசை பற்றி ஒரு சின்ன விளக்கம். நாட்டை அந்நியனிடம் அடகு வைக்கும் “தனியார் மயம், தாராள மயம்” கொள்கையை முதன்மைபடுத்தி மைய அரசின் திட்டம் மக்களின் நலன் மறந்து, தரகு முதலாளிகளின் தேவை கேற்ப்ப ஏகாத்தியபத்திய ஆணைக்கினங்க, மக்களை கல்வியற்ற தற்குறிகளாக்க கல்வியையும் விற்ப்பனை பொருளாக்கி மக்களின் எதிர் காலத்தையே சூனியமாக்கிவிட்டது. ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்வியாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக சட்டத்தின் மூலமும் கமிசன் மூலமாகவும் வெளியிடபட்ட இ.க.க சட்டம் 2009 உண்மைகள் என்ன நீங்களே புரிந்து கொள்வீர்.

இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009: அரசு கடைபிடிக்கும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பெயரில் இலவசம் என்ற சொல் இருந்தாலும் கட்டணப் பள்ளிகளுக்கும் இடம் அளிப்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்காது. சட்டத்தில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: பள்ளிகள் அமைவிடம் குழந்தைகள் எளிதாகச் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும்; 5 -ஆம் வகுப்பு வரைப் படிக்க 1 கி.மீ. தொலை விற்குள்ளும், எட்டாம் வகுப்பு வரைப் படிக்க 3 கிமீ தொலைவிற்குள்ளும் பள்ளிகள் அமைய வேண்டும்.

அரசு அங்கீகாரமில்லாது எப்பள்ளியும் இயங்கக்கூடாது. அங்கீகாரம் பெறாத அல்லது மறுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது அரசின் பொறுப்பாகும். பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோரை அல்லது குழந்தைகளை நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மாற்றுகைச் சான்றிதழ் குழந்தைகளின் உரிமை. அதனைத் தர மறுத் தாலோ, கால தாமதம் செய்தாலோ தண்டனைக்கு உட்படுத்தப்படும்.

பள்ளியில் சேராமலோ, அல்லது பள்ளியிலிருந்து இடைவிலகியோ இருக்கும் குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேரும்போது அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் சேரும் வகுப்பிற்குத் தகுதியுள்ளவராக்கும் பொறுப்பு பள்ளியைச் சார்ந்தது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளித்திட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாகுபாடுகளுக்கும் எந்தக் குழந்தையும் உட்படக்கூடாது. பள்ளிகளில் உடல், மனரீதியான தண்டனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்த வகுப்பிலும் மாணவர்கள் ஓராண்டிற்கு மேல் தக்கவைக்கக் கூடாது. இடையில் பள்ளியை விட்டு வெளியேற்றவும் கூடாது.

அரசு உதவிபெறா தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பள்ளிக்கு அருகில் வசிக்கும் எளியவர் வீட்டுக் குழந்தைகளுக்குஒதுக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்கள்தான்நியமிக்கப்பட வேண்டும். கல்விப் பணியல்லாத மாற்றுப்பணிகளில்ஆசிரியர்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு பள்ளிக்கும்பெற்றோரைப் பெரும்பான்மையோராகக் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுசெயல்பட வேண்டும்.

நடப்பது ( நடை முறை ) தான் என்ன என்பதனை நான் விளக்க தேவையில்லை?

பொதுச் செலவில், உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கும் பணத்தின் அளவு பாதியாகக் குறைந்துவிட்டதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் எங்கெல்லாம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்குகிறதோ, அங்கெல்லாம், கல்வித் தரம், கற்றல் கற்பித்தல் முறைகள், புதியன காணும் போக்கு அதிகமாக இருப்பதைக் காண முடியும். இந்நிலையில், முன்னணியில் இருந்த பல உயர்கல்வி நிறுவனங்கள், அதில் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகளை முடக்க, கல்வி உதவித்தொகையை முடக்க நுட்பமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மாணவன் நேரடியாக நீதி கேட்க நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பை மறுக்கும் ஏற்பாடுகள் இந்தப் பரிந்துரையில் இருப்பது அச்சம் தருகிறது. (நா.மணி The Hindu 17/08/2016)

நம்பப்படும் ‘2016-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ என்ற மத்திய மனிதவளத் துறையின் ஆவணம் உயர்கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். உயர் கல்வித் துறையில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள், 90% கல்லூரிகள் சராசரிக்கும் கீழாகத் தரம் குறைந்தவை. துணைவேந்தர்கள் நியமனங்களோ, சாதி, சமய அரசியல் சார்புத்தன்மை கொண்டதாகவும் லஞ்ச லாவண்யம் சார்ந்ததாகவுமே மாறிவிட்டது என்று கூறினார் 2007-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டுக் கல்வி நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இது புதிய விஷயம் இல்லை. இந்திய உயர்கல்வித் துறையின் அவலங்கள் இவ்வளவுதானா? இக்குழு கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவராத அவலங்கள், சிக்கல்கள் பல. அவற்றை அறிந்திருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஒற்றை நிறுவனம் ஒன்றை அமைக்கப் பரிந்துரைத்தது சுப்ரமணியம் குழு. ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறாமல், அதைப் பூடகமாகப் பேசுகிறது அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம். (நா.மணி The Hindu 17/08/2016).

நாட்டின் கல்வியை அழிக்க துணிந்துவிட்ட அரசும் அதன் ஏவலர்களும் மக்களுக்காக சிந்திக்க போவதில்லை, உண்மையான மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஒவ்வொருவரும் இதனை எதிர்ப்போம் மக்களின் விடுதலைக்கான சரியான கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்க, உண்மையான இலவச கல்வி கொள்கை நடைமுறை படுத்த பரந்துபட்ட மக்களுடன் இணைந்து இன்னொரு சுதந்திர போர் அறை கூவினால் மட்டுமே இந்த ஏகாத்திபத்திய கொள்ளையிரிடமிருந்து காப்பாற்ற படுவோம்


பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...