நக்ஸல்பாரி ஒரு கிராமத்தின் விவாதம் தொடர்ந்து

 

      • Siddharth Chaithanya
        நக்சல்பாரி என்கிற தனி நபர் அல்லது கும்பலாக ஆயுதம் தாங்கிய சாகசம்(Adventurism) கம்யூனிசத்தில் அடங்காது .. இது கம்யூனிசத்திற்கு நேர் எதிரான போக்கு
        • Like
        • Reply
        • 4w
        • Author
          இரா. முருகவேள்
          Siddharth Chaithanya அதற்குள் 24 பக்கமும் படித்து விட்டீர்களா நண்பா
          6
          • Like
          • Reply
          • 4w
          • Bharathi Nathan 
            Follow
            இரா. முருகவேள் மக்கள் யுத்தம் வழி நடத்திய வீரஞ்செறிந்த ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி விசைத்தறி தொழிலாளர் போராட்டம் பற்றி சொல்லவில்லை. ஏனெனில், சிபிஎம் காலத்தில் தொழிற்சங்க போராட்டம் நடந்த பிறகு எம்.எல் காலத்தில் கட்டப்பட்ட தொழிற்சங்கம் இது. தறியுடன் நாவல் இந்த காலத்தில் தான் எழுதப்பட்டது. தோழர் தமிழரசன் காலத்தில் மக்கள் யுத்தம் பிளவுபட்டு தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி என்று அவர் தனி கட்சி கண்டார். தோழர் தமிழரசன் நடத்திய முந்திரிகாடு போராட்டங்கள். தனிக்குவளைக்கு எதிரான போராட்டங்கள் முக்கியமானவை. தோழர் எல். அப்புவுக்கு பிறகு கூட்டக்குழு அமைப்பு கட்டிய மூன்று தோழர்களில் தமிழ்வாணன் மற்றும் ஏலகிரி ராமன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே தமிழ்நாடு வரலாறு அத்துப்படி.
            3
            • Like
            • Reply
            • 4w
            • Edited
          • Author
            இரா. முருகவேள்
            Bharathi Nathan உண்மைதான் தோழர். இது ஒரு சுருக்கமான வரலாறு மட்டுமே. Outline. எல்லா விசயங்களையும் எழுதவில்லை.
            2
            • Like
            • Reply
            • 4w
          • Siddharth Chaithanya
            இரா. முருகவேள் நக்சல்பாரி மார்க்சியத்திற்கு எதிரான தடம் மாறிய பாதை என்பதை சொல்ல இருக்கும் அனைத்தையும் வாசித்து விட்டு தான் வர வேண்டும் எனபது தான் நிபந்தனையா..
            • Like
            • Reply
            • 4w
          • Author
            இரா. முருகவேள்
            Siddharth Chaithanya இந்தக் கட்டுரையை நான் பதிவிட்டு ஒருசில நிமிடங்களில் பதில் கொடுத்து உள்ளீர்கள். அதனால் இவ்வளவு விரைவாக 24 பக்க கட்டுரையை படித்து விட்டீர்களா என்று கேட்டேன்.
            • Like
            • Reply
            • 4w
        Most Relevant is selected, so some replies may have been filtered out.
      • Mani Kandan
        சற்றே,ஏறக்குறைய இருந்தாலும்,முன்னொரு காலத்தில் கலந்துகொண்ட அரசியல் வகுப்பை கண்முண்ணே காட்சியப்படுத்தியதை உணர்கிறேன் தோழர்...
        3
        • Like
        • Reply
        • 4w
      • Kamal Udeen
        மக்கள்திலகம் Mgr
        3
        • Like
        • Reply
        • 4w
      • வ. கீரா
        நீண்ட கட்டுரை...முடிந்த வரை அழகாக Tho குத்திருக்கிறீர்கள்...சிற ப்பு
        2
        • Like
        • Reply
        • 4w
      • எம். சக்தி
        நக்சல்பாரிகளின் தியாகமும் புரட்சிகரத் துணிச்சலும் போற்றுதற்குரியது. அனைவருக்கும் செவ்வணக்கம். ஆனால், மாற்றுக் கருத்து ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நக்சல்பாரிகள், சிபிஎம்-மில் இருந்து பிரிந்து சென்றது கடைசி இடம் பர்துவான் பிளீனம் 1968. அன்று சாரு பிரிவினர் வெளிநடப்பு செய்த பின்னர், எமது தலைவர்கள் எச்சரித்தார்கள். குறுங்குழுவாதிகளால் ஒன்றுபட்டு இருக்க முடியாது. அவர்கள் ஒன்று பத்தாக பத்து நூறாக சிதறிப் போவார்கள். காரணம் குறுங்குழுவாதத்தின் குணமே அது தான் என்று. அதன் பின் பளிச்சென நீங்களே ஒரு காமெடிக் கதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள். கோவையில் இரு நக்சலைட் இருந்ததாகவும், இருவரில் ஒருவர் மற்றவரிடம் விலகல் கடிதம் கொடுத்து விட்டதாகவும், கடிதம் பெற்றவர் தன் கடிதத்தை யாரிடம் தருவதெனத் தெரியாமல் அலைந்து கொண்டிருப்பதாகவும் நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். நக்சல்பாரி வழி தோறும் அழிவுகள், பிளவுகளாகவே இருந்தால், தற்கொலைப்பாதை என்று தானே அர்த்தம்?. ஆனால் வரலாற்று பின்புலத்தில் வைத்து இந்திய கம்யூனிச இயக்கத்தை முழுமையாக காய்தல் உவத்தலின்றி ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. ஒரு பருந்துப் பார்வையில் நக்சலிச இயக்கத்தை பார்வைக்கு கொண்டு வந்த தோழருக்கு எனது அன்பும் நன்றிகளும்.
        2
        • Like
        • Reply
        • 4w
        • Edited
        • Author
          இரா. முருகவேள்
          எம். சக்தி காமெடி கதை என்பது சரியான பிரயோகம் அல்ல தோழர். நக்சல் இயக்கம் பல துண்டுகளாக உடைந்தற்கும் cpi, cpi-m அவ்வாறு உடையாமல் இருப்பதற்கும் காரணங்கள் உள்ளன தோழர். Cpi, cpim கட்சிகள் ஒற்றை பரிமாணம் கொண்டவை அல்ல. அவற்றில் பின்நவீனத்துவ வாதிகள், டிராட்ஸ்கிய வாதிகள், சுற்றுச் சூழல் வாதிகள், ஓஷோ மீது ஆர்வம் கொண்டவர்கள் என்று பலத்ரப் பட்டவர்கள் முரண்பாடுகள் உடன் இருக்க முடியும். ML கட்சிகள் ஒற்றை பரிமாணம் கொண்டவை. உறுதியான நிறுவன கட்டமைப்பு கொண்டவை அல்ல. எனவே முரண்பாடு வரும் போது பிளவு தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அம்பேத்கார் இயக்கங்கள், திக போன்றவையும் எண்ணற்ற துண்டுகளாக உள்ளதற்கும் இதேதான் காரணம். எது சரி எது தவறு என்பதற்குள் நான் போகவில்லை. இரண்டிலுமே சிக்கல்கள் உள்ளன. எனக்கு இப்படித் தோன்றுகின்றது.
          4
          • Like
          • Reply
          • 4w
          • Edited
          • Venkateswaran Thathamangalam Viswanathan
            இரா. முருகவேள் இருபதாம் நூற்றாண்டைக் குறித்து எழுதும்போது எரிக் ஹோப்ஸ்பாம், இரண்டு கம்யுனிஸ்டுகள் இருந்தால் மூன்று கருத்துக்கள்/ நிலைபாடுகள் இருக்கும் என வேடிக்கையாகக் கூறுவார்.
            எப்போதும் சமூகத்தில் பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். எனவே
            "பலத்ரப் பட்டவர்கள் முரண்பாடுகள் உடன் இருக்க முடிகிற இயக்கமே நீண்டு செயல்படும். வேட்டையாடப்படும் சூழல், போன்ற சில விதிவிலக்கான சூழல்களை தவிர இதர சூழல்களில் பலதரப்பட்டவர்கள் பங்கு கொள்ள வழிவகுக்கும் இயக்கமே சரி என நான் கருதுகிறேன்.
            நிச்சயம் தலைமை மற்றும் இயக்கத்தோடு இணைந்த ஆர்வலர்கள் தத்துவார்த்த பயிற்சியை தர வேண்டும். ஒரு சிலர் தீர்மானம் செய்த காராறன ஒரு மார்க்ஸிட் நிலைபாடு கொண்டவர்கள் மட்டுமே இயக்கத்தில் இருப்பார்கள் என்பது சரிபட்டு வராது. அனைவரும் தம் அளவில் முழுமையான மார்க்ஸிட் ஆக மாற முயற்சி செய்கிறோம்; செய்ய வேண்டும் முனைப்பு காட்ட வேண்டும்; இந்த முனைப்பை இயக்கம் உந்த வேண்டும். ஒவ்வொரு இயக்க ஆர்வலரையும் இந்த திசையில் செயல்பட தூண்டவேண்டும். இந்த பார்வையில் இயங்குவது தான் இடது கருத்து வலுப்பெற உதவும்.
            4
            • Like
            • Reply
            • 4w
          • Author
            இரா. முருகவேள்
            Venkateswaran Thathamangalam Viswanathan OMG நீங்களா இந்த அளவுக்கு நேரடி அரசியல் எழுதியது! அட்டகாசம். மாவோ two line struggle பற்றி சொல்கிறார். ஆனால் பன்முகத் தன்மை இருந்தாலும் சில அடிப்படை விஷயங்களில் ஒத்த கருத்து அவசியம் என்று நினைக்கிறீர்களா தோழர்?
            • Like
            • Reply
            • 4w
            • Edited
          • Venkateswaran Thathamangalam Viswanathan
            இரா. முருகவேள் பன்முகத் தன்மை இருந்தாலும் சில அடிப்படை விஷயங்களில் ஒத்த கருத்து அவசியம் என்று நினைக்கிறீர்களா தோழர்?
            ஆம். சில விஷயங்களில் ஒத்த கருத்து; அல்லது கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பான்மை கருத்தை ஏற்றுக்கொள்வது என்கிற நிலைப்பாடு அவசியம். ஆனால் அது எந்த விஷயம் என்பது இடம் காலம் பொறுத்து மாறுபடும். நாளை புரட்சி நடக்கும் நிலை இல்லை. எனவே இன்று புரட்சிக்கு பின்னர் அமைப்பு எதுவாக இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்து வேறுபாடு இருந்தால் தவறில்லை. ஆனால் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வரும் political line - குறிப்பிட்ட சக்திகளுடன் கூட்டு போன்றவற்றில் ஒத்த அல்லது குறைந்த பட்சம் சகித்து கொள்ளும் மனப்பான்மை தேவை. ஒத்த கருத்து உருவாவது என்பதும் ஒரு process. கள அனுபவம், தத்துவார்த்த பகுத்தாய்வு இரண்டும் கலந்தது தான் ஒத்த கருத்து ஏற்பட முடியும். மரபணு மாற்ற விதை சிக்கலை எடுத்துக்கொள்வோம். ஒரு பகுதி ஆபத்து; இயற்கை களங்கம்- இயற்கையின் கற்பு கெட்டுவிடும் என்பது போல பார்வை கொண்டுள்ளது. ஆனால் விவசாயிகள் பிடி பருத்தியை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். அதில் பல்வேறு சிக்கல் இருந்தாலும் புறக்கணிக்கவில்லை. விவசாயிகள் முன்வைக்கும் சிக்கல்கள்; போலி விதைகள் மூலம் ஏமாற்றப்படுவது; விவசாய இடுபொருள் விற்பனை கடைகள் மூலம் கடனில் வாங்குவதால் வட்டி அதிகமாகச் செலவாவது போன்றவை தான் முக்கிய பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. இங்கே நான் சொல்ல வருவது இது சரி அல்லது அது தவறு என்பதல்ல. அனுபவம் தான் பெரிது எனவும் நான் வாதிடவில்லை. விவசாயிகளின் போக்கு false consciousness அக இருக்கலாம். தத்துவார்த்த வாதம் வெறும் எட்டு சுரைக்காயாக இருக்கலாம். எனவே தான் கள அனுபவங்கள் மற்றும் தத்துவார்த்த விமர்சனம் இரண்டும் இணைந்த விமர்சன பார்வை வேண்டும்.
            மதவெறி எதிர்ப்பு, சாதிய மறுப்பு போன்றவற்றில் குழப்பம் ஏதுமில்லை. அவை பெரும்பாலும் கருப்பு வெள்ளை. ஆனால் பல பிரச்சனைகள் சற்றே கருப்பும் வெளுப்பும் கலந்தவை. இதுபோன்ற சற்றே குழப்பமான நிலையில் வறட்டுதனமாக இது அல்லது அது என தீர்மான முடிவுக்கு வருவது சரியாக இருக்குமா? இடதுசாரி அணிகள் நிதானத்துடன் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும் அல்லவா? இவை குறித்து தொலைக்காட்சி விவாதம் போல விவாதங்கள் போதாது. இந்த சூழல்களில் கமிட்டி முடிவுகள் வறட்டு தனமாக அமையும் ஆபத்து உண்டு.
            தொகுப்பாக கட்டுக்கோப்பான உறுதியான ஒத்த நிலைப்பாடு சில விஷயங்களில் அவசியம் - இடம் களம் காலம் நடக்கும் போராட்டங்கள் போன்றவற்றோடு இது தொடர்புடையது. சில அம்சங்களில் பல்வேறு கருத்துக்களின் மோதல் தான் தெளிவு பிறக்க வழி வகுக்கும்.
            • Like
            • Reply
            • 3w
        Most Relevant is selected, so some replies may have been filtered out.
      • Vinaya Gam
        நக்சல் பாரி இயக்கத்தின் 70களில் இருந்து 90கள் வரையிலான அந்த 20 ஆண்டுகால அரசியல் அமைப்பு இயக்கங்களின் போராட்ட வரலாற்றை ஆவண அடிப்படையிலும் போராட்டங்களின் அடிப்படையிலும்எழுதி வெளியிட வேண்டும். நாவல் இலக்கியம் அனுபவத் தொகுப்பு என நிறைய படைப்புகள் வர வேண்டி உள்ளது.மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில் இந்த தளத்தில் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள படைப்புகள் மிக மிக சொற்பமே. பழைய அனுபவம் மிக்க மூத்த தோழர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் வேண்டி கேட்டுக்கொண்டோம் அவர்கள் வாய் திறக்க மறுக்கிறார்கள். எழுதுவதற்கும் தயார் இல்லை. இந்த மர்மம் நிறைந்த சூழ்ச்சிமத்தை தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
        6
        • Like
        • Reply
        • 4w
        • Author
          இரா. முருகவேள்
          Vinaya Gam மேற்கு வங்காள இயக்கம் பற்றி எத்தனை நூல்கள், கட்டுரைகள் இருக்கின்றன.
          • Like
          • Reply
          • 4w
      • சண்முகராஜா
        சிறப்பான கட்டுரை💪
        • Like
        • Reply
        • 4w
      • Marx Pandian
        நல்ல பதிவு...மக்கள் யுத்தக்குழுவின் வரலாறு மட்டுமே பதிவில் உள்ளது...
        • Like
        • Reply
        • 4w
        • Edited
        • Author
          இரா. முருகவேள்
          Marx Pandian ஆமாம் தோழர். அந்தக் குறை இருக்கிறது. உங்களைப் போல யாராவது மனது வைத்தால் சரி செய்யலாம்.
          • Like
          • Reply
          • 4w
      • தோழர் கார்த்திக்
        மராத்தான் கட்டுரை தோழர்... இவ்வளவு பெரிய வரலாறை வங்கப் படங்கள் போல இங்கு ஏன் தோழர் வருவதில்லை..‌‌நமக்கு கிடைப்பதென்னவோ விடுதலை போன்ற படங்கள்
        2
        • Like
        • Reply
        • 4w
        • Author
          இரா. முருகவேள்
          தோழர் கார்த்திக் ஒரு நல்ல வரலாற்று நூல் இங்கு வரவில்லை தோழர். இப்போதுதான் தறியுடன், உடலாயுதம் போல ஒன்றிரண்டு நாவல்கள் வருகின்றது. வங்கத்துடன் ஒப்பிடும் போது அவர்கள் எங்கோ இருக்கின்றனர். கல்கத்தா அறிவாளி வர்க்கம் நம்மை விட மேற்குலகுடன் நெருங்கிய தொடர்பு… 
          See more
          6
          • Like
          • Reply
          • 4w
      • Shanmuga
        அருமை வரளாறுற்பதிவு தோழர் ஆட்டோ சண்முகம் 9489918431
        • Like
        • Reply
        • 4w

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...