கல்வியும் மொழியும்-சிபி

பேசும் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்தன ஆனால் ஹிந்தியை  தாய் மொழி கொண்ட மாநிலம் எது என்று ஒரு தேடுதல் இவை. 

 தமிழ்நாடு - தமிழ்

 கேரளா - மலையாளம்

 ஆந்திரா - தெலுங்கானா - தெலுங்கு.

கர்நாடகா - கன்னடம்.

 மகாராஷ்டிரா - மராத்தி.

 குஜராத் - குஜராத்தி.

 பஞ்சாப் - பஞ்சாபி.

 ராஜஸ்தான் - ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

 ஹரியானா -ஹரியானி.

 இமாசலப்பிரதேசம் - மஹாசு பஹாரி, மண்டேலி, காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி.

ஜம்மு-காஷ்மீர் - காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.

உத்தர்காண்ட் -கடுவாலி, குமோனி.

 உத்திரப்பிரதேசம் - பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி.

பீஹார் -  போஜ்புரி, மைதிலி.

ஜார்கண்ட் -  சந்தாலி.

 சத்தீஸ்கர் - கோர்பா.

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி.

மேற்கு வங்கம்- வங்காளி.

ஒடிசா - ஒரியா.

வட கிழக்கு மாநிலங்கள்- 

அசாமி, 

போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி.

இதில் உங்க ஹிந்தி யாருக்குத் தாய் மொழி?

யாருக்குமே தாய் மொழியாக இல்லாத ஒரு மொழியை...

சுய தன்மையற்ற ஒரு கலப்பட மொழியை...

எந்த விதமான இலக்கண, இலக்கிய 'பின்புலம் இல்லாத ஒரு அரைகுறை மொழியை...

இந்தியாவின் பொது மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. என்கின்றனர் தமிழ் தேசியவாதிகள்.

இதன் உண்மை தன்மையை சற்று அறிவோம்.

அரசியல் சாசனத்தில் தெளிவு

அரசியல் சாசனம் இரண்டு விசயங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. முதலாவது, இந்தியா என்பது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதாகும். இரண் டாவது, மாநிலங்களுக்கிடையேயான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அலுவல் மொழி என்பது அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்ட நேரத்தில் பயன் பாட்டில் இருந்த மொழியே என்பதாகும். ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புக் கொண்டால்’ மட்டுமே அலுவல் மொழியை ஆங்கிலத்திலிருந்து இந்தியாக மாற்ற முடியும் என மொழி தொடர்பான பிரிவுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மொழி தொடர்பான விதிகளைப் பாதுகாத்திட நாடாளுமன்றத்திலிருந்து ‘20 பேர்’ மற்றும் மாநிலச் சட்டமன்றங்களிலிருந்து ‘10 பேர்’ என ‘30 உறுப்பினர்களைக் கொண்ட குழு’வை அமைக்க அரசியல் சாசனத்தின் பிரிவு 344(4) குறிப்பிடுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகிய இரண்டு அமைச்சகங்களுக்கிடையேயான விசயமாகப் பகிர்ந்தளிக்கும் நடைமுறையின் மூலம் இக்குழுவின் செயல்பாடுகளும் நோக்கமும் அரசியல் சாசனத்தால் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் பொறுத்தவரை மொழி தொடர்பான பணி என்பது கல்வி, கலாச்சார வெளிப்பாட்டை ஊக்குவிப்பது என வகுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தைப் பொறுத்த வரை, ‘யூனியன்’ உடனான (ஒன்றிய அரசுடனான) மாநிலங்களின் உறவுகளைப் பாதுகாப்பது, மொழி சிறுபான்மையினரின் மொழிவாரி உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் இந்தியை ஊக்குவிப்பது என இப்பணி விரிவடைகிறது. இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தி மொழியை ஊக்குவிப்பது என்பது ‘பிற மொழிகளோடு குறுக்கீடு செய்யாது இருக்க வேண்டும்’ என அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது.
மொழியின் வீழ்ச்சி குறித்த தரவுகள்
இந்தி மொழிக் குழுவிற்கு இரண்டு முக்கியமான கேள்விகள் உள்ளன. அரசியலமைப்பின் விதிகளின் வெளிச்சத்தில் இக் கேள்விகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். “கடந்த 70 ஆண்டுகளில் இந்தி மொழி ஏதேனும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறதா? மேலும், அத்தகைய வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அது பிற அட்டவணை மொழிகளின் வளர்ச்சியில் குறுக்கிடுகிறதா?” என்பவையே அக் கேள்விகளாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி பல விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம். 2011ஆம் ஆண்டில், இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை மொத்தம் 52.83 கோடியாக இருந்தது. அதாவது, மொத்த மக்கள் தொகையில் 43.63 சதவீதம் ஆகும். 1971ல் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 20.27 கோடியாகும். அதா வது, மொத்த மக்கள் தொகையில் 36.99% ஆகும். 2001-2011 வரையிலான 10 ஆண்டு காலத்தில், மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆகும். அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசப் படும் மொழிகளின் பட்டியலில் இரண்டா வது இடத்தில் உள்ள வங்காள மொழி வீழ்ச்சியையே அடைந்துள்ளது. 1991ஆம் ஆண்டில் 8.30% இந்தியர்கள் வங்காள மொழியை பேசி வந்தனர். 2001ல் இது 8.11% ஆகவும், 2011ல் 8.03% ஆகவும் குறைந் தது. 1991ஆம் ஆண்டில் 7.87% என்ற விகிதத்திலி ருந்து 2001ல் 7.19% ஆகவும், 2011ல் 6.7% ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ள தெலுங்கு மொழியின் நிலையும் இதுவேயாகும்.
மராத்தி மொழியின் நிலையும் இதிலிருந்து மாறுபட்டதாக இல்லை – 7.45% (1991), 6.99% (2001), 6.86% (2011) என்பதே அதன் நிலை. நாட்டில் எஞ்சியிருக்கும் தொன்மையான மொழியாகிய தமிழ் மொழி, உள்துறை அமைச்சகத்தின் கவ னத்தை சிறிதளவாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால், வங்காளம், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலிருந்து அது மாறுபட்டதாக இல்லை என்பதே உண்மையாகும். 1991ஆம் ஆண்டில் தமிழ் பேசுபவர்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் 6.32% ஆகும். 2001ல் 5.91% ஆகவும், 2011ல் 5.70% ஆகவும் உள்ளது. பத்தாண்டு காலத்தில் வளர்ச்சியை (சிறிதளவே என்றாலும்) எட்டியுள்ள ஒரே பிரதான மொழி குஜராத்தி ஆகும். மேலும், சிறியதும், அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகளில் நல்ல வளர்ச்சி யைக் காட்டியுள்ள ஒரே மொழி சமஸ்கிருத மாகும். 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப் படும்போது, நாட்டில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தி மற்றும் சமஸ்கிருதம், மற்றும் குஜராத்தி நீங்கலாக, எட்டாவது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளின் நிலை யும் மோசமாகவே இருக்கும். இதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே ஆகும். இந்நிலையில், இந்தி தவிர இதர இந்திய மொழிகள் வீழ்ச்சி குறித்தும், 9ஆம் நூற்றாண்டிலிருந்து வாழும் மொழியாக இல்லாது போன சமஸ்கிருதத்தின் வளர்ச்சியின்மை குறித்தும் இந்தி மொழி ஊக்குவிப்பிற்கான நாடாளுமன்றக் குழு தனது கவலையை தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தி மொழி வளர்ச்சி – கட்டுக்கதையே!
மற்ற எல்லா மொழிகளும் ஒப்பீட்டளவில் சரிவையே காட்டுகிறபோது, இந்தி மொழி மட்டும் எப்படி நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது? 2011ஆம் ஆண்டில் இந்தி மொழியைப் பேசுபவர்களாகப் பதிவு செய்யப்பட்ட 52.83 கோடி பேர்களில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை மட்டும் இடம்பெறவில்லை; மாறாக, 50க்கும் மேற்பட்ட இதர மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கியுள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுவதாக சொல்லப்படுகிற- சினிமா, இலக்கியம், செய்தித்தாள்கள், பாடல்கள், நாடகம் மற்றும் வெளியீட்டுத் துறைகளில் வளர்ச்சி யடைந்து வருவது கண்கூடாகத்தெரிகிற- போஜ்புரி மொழி, இந்தி மொழி பேசுபவர்க ளின் எண்ணிக்கையோடு இணைக்கப்பட் டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தர் கண்ட், சத்தீஸ்கர், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பெரும்பாலான மொழிகளும் இந்தித் தொகுப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதானமாகவும், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பேசப்படுவது பவாரி மொழியாகும். பவாரி மொழியைப் பேசும் பெரும்பாலானவர்க ளுக்கு இந்தி சிறிதளவு கூட புரியாது என்ற போதும், அவர்கள் ‘இந்தி’ மொழி பேசுபவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
ஆக, ‘இந்தி மொழி வளர்ச்சி’ என்பது கட்டுக்கதையே ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மேற்கூறப்பட்ட இதர மொழிகளை இந்தி மொழியோடு இணைக்காதிருந்தால், இந்தி மொழி யைப் பேசுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 39 கோடியாக – அதாவது 2011ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் 32 சதவீதத்திற்கும் சிறிது குறைவாக - சரிந்திருக்கும். மேலும், அட்டவணையில் இடம்பெற்றுள்ள இதர மொழிகளிலிருந்து மிகவும் வேறு பட்டதாக இருந்திருக்காது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தி மொழி குறித்த தரவுகள் உண்மையான நிலையை பிரதிபலிக்கச் செய்வது குறித்தும் இக்குழு கவலை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலம் பேசுபவர்கள் குறித்த தரவு மிகவும் உண்மையானதாக உள்ளது. மொத்தம் 3,88,793 இந்தியர்கள் (2,59,678 ஆண்கள் மற்றும் 1,29,115 பெண்கள்) ஆங்கிலம் மட்டுமே பேசுவதாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரி விக்கிறது. அட்டவணையில் இடம் பெற் றுள்ள மொழிகளில் மிகவும் குறைவாகப் பேசப்படும் மொழியோடு இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 17.61 லட்சம் பேர் மணிப்பூரி மொழியையும், 14.82 லட்சம் பேர் போடோ மொழியையும் பேசுகிறார்கள். இது குறித்து எந்த கருத்தையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இந்த புள்ளிவிவரங்கள் பற்றி பெருமை கொள்ள எதுவுமில்லை.
ஒளிரும் இதர மொழிகள்
இந்த உலகில் உள்ள எந்தவொரு சிறிய அல்லது பெரிய மொழியைப் போல் இந்தியும் ஓர் அழகான மொழியாகும். இந்தித் திரைப்படம் இந்தியாவிற்குக் கொஞ்சம் பெருமையையும், கொஞ்சம் அந்நிய செலாவணியையும் கொண்டு வந்துள்ளது. இந்தி இலக்கியம் செழுமை வாய்ந்ததாகவும், அது பற்றி குறிப்பி டும்போது பெருமை!யைத் தூண்டு வதாகவும்! உள்ளது. இருந்தபோதும் கூட, எட்டாவது அட்டவணையில் இணைக் கப்பட்டுள்ள மொழிகளில் இது இளைய மொழிகளுக்குள்ளேயே வருகிறது என்ப தும் உண்மையாகும். மறுபுறத்தில், தமிழ், கன்னடம், காஷ்மீரி, மராத்தி, ஒடியா, சிந்தி, நேபாளி மற்றும் அசாமி ஆகிய மொழி கள் மிக நீண்ட, பழமையான வர லாற்றைக் கொண்டுள்ளன. அறிவின் மொழியாகவும், தமிழ், கன்னடம், வங்காளம் மற்றும் மராத்தி (அவற்றின் ஏராளமான கலைக்களஞ்சியங்கள் மற்றும் வர லாற்று இலக்கியங்களோடு) ஆகிய மொழிகள் இந்தியை எளிதாக மிஞ்சுகின்றன. ஒரு மொழி படிப்படியாகவே வளர்கிறது. அதிகாரப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பிப்பதன் மூலம் வளருமாறு கட்டாயப்படுத்த முடியாது.
அமித்ஷாவின் நோக்கம் என்ன?
இந்தியின் வரலாறு, இந்தியாவின் பன்மொழி, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் பல மாநிலங்களின் மொழி உணர்வு ஆகியன அனைத்தும் மொழியியல் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள இக்குழுவையும், அலுவல் மொழிக் குழுவையும் வழிநடத்தியிருக்க வேண்டும். திடீரென ‘இந்தி இந்தியா’ விற்கு அழைப்பு விடுக்க உள்துறை அமைச்சர் அமித் சாவைத் தூண்டியது எது? 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 121 கோடி யில் 52 கோடி பேர் இந்தி பேசுவதாக அதி கரித்துக் காட்டப்பட்டபோதும், நாட்டில் இந்தி பேசும் மக்கள் மொழிவாரி பெரும் பான்மையினர் அல்ல. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே கூட 69 கோடி பேர் இந்தி மொழியைப் பேசாதவர்கள் என்பதுதான் உண்மை. அப்படியானால், இந்தி, இந்தியாவின் பிரதான மொழி அல்ல. ஆனால், 2024ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மிக முக்கிய மான பகுதியாக உள்ள இந்தி பேசும் மாநி லங்களில் உள்ள இளைஞர்களை பாதிக்கும் மிகப் பெரிய அளவிலான வேலையின்மைக்கு ஒரு வலி நிவாரணி யாக, இந்தி மொழியின் பெருமையைத் தூண்டும் அமித்சாவின் முயற்சி தேவைப்படக் கூடும். இருந்தபோதும் கூட, இந்துக்களை அணி திரட்ட பாகிஸ்தானை பாதுகாப்பு பணிகளுக்கு அச்சுறுத்தலாக முன்னிறுத்துவதும், ஆங்கிலத்தை தேச விரோத மொழியாக சித்தரிப்பதும் இனி இந்தி பேசும் மக்களை அணி திரட்ட உதவிடாது என்பதை உள்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை.
நன்றி : 14-04-2022 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தமிழில் : எம்.கிரிஜா.
#ஹிந்தி மொழி கற்பதில் தவறில்லை.... திணிக்க வேண்டாமே...
தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது.
எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.
ஒன்றைத்தவிர.
இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை.
ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவதில்லை” என்று கேட்டான்.
நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன்.
“மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான்.
“உங்கள் மாநில மொழி எது?”
அவன்“இந்தி" என்று பதிலளித்தான்.
“அது தான் உங்கள் ஊரில் பேசுகிறார்களா?”என
“ஆம்”என்று உறுதியாக தலையாட்டினான்.
ஆனால் “உங்கள் ஊருக்கென்று ஒரு மொழி இருக்குமே?”என்று கேட்டேன்.
அவன் நெடு நேரம் யோசித்துவிட்டு, “#மால்வி?”
“எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள். அது எங்க ஊர் கிராமப்புறங்களில் பேசும் மொழி.”என்று சொன்னான்.
அதற்குப் பின் அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டதே தவிர எந்தக் கேள்வியும் எனக்கு எழவில்லை.
“உன் தாய்மொழி
‘இந்தி"யா?‘மால்வி''யா?” என்று நான் கேட்டால் அவனுக்கு அது புரியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. அவர்கள் ஊரில் உள்ள பலருக்கும் இது தெரியாது.
மத்தியப் பிரதேசத்தில் 1941 ஆங்கில அரசின் புள்ளி விவரக்கணக்குப் படி மால்வி மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,லட்சத்து 7
8ஆயிரத்து 087 பேர்.
ஆனால் அதே ஆண்டு
இந்தி மொழி பேசிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா..?
14 லட்சத்து 40,906 பேர்கள் மட்டும் தான்.
அதாவது மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி பேசியவர்களை விட மால்வி மொழி பேசிய மக்களின் மக்கள் தொகை அதிகம்.
1951லேயே நிலைமையை தலைகீழாக மாற்றியது.
இந்திய அரசின் மக்கள் தொகை கணக்குப் படி மால்வி பேசுவோர்
5 லட்சம், என்றும், இந்தி பேசுவோர் எண்ணிக்கை
58 லட்சம் என்றும்.
பஞ்சாபில் இந்தியை ஆட்சி மொழி(?)யாக்கும் சுற்றறிக்கையை அந்த மக்களுக்கு இந்தி தெரியாது(?) என்பதால் மக்கள் பேசிக்கொண்டிருந்த(!) உருது மொழியில் அச்சடித்து கொடுக்கும் அளவிற்கு இந்தி மயம் வேகமாக நடந்தது.
அதனால்தான் அடுத்த
10 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்கள் தொகை 40 விழுக்காடு என்ற கதை ஆனது.
இதன் விளைவு மால்வி போன்ற மொழிகளின் இன்றைய நிலைதான்.
தன் தாய்மொழியையே அவனுக்குத் தெரியாமல் மறக்கடிக்கும் அளவிலான கொடூரத்தின் அடிமை அடையாளம் தான் அந்த இளைஞன்.
அவன் மட்டுமல்ல.
தாங்கள் இந்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த 90 விழுக்காடு மக்களின் நிலையும் கூட இதுதான்.
80க்கும் மேற்பட்ட உங்கள் மொழிகளை முற்றிலும் அழித்து, அதன் இரத்த வெள்ளத்தின் மீது கட்டப்பட்ட பெரும் கோட்டை தான் நீங்கள் கொண்டாடும் இந்தி என்பதை அவர்களிடம்
யார் போய் சொல்வது..?
அல்லது அது நமக்கும் தான் தெரியுமா..?
இந்தி பெல்ட் என்று சொல்லும் மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் தனித்த மொழி இருக்கிறது.
ஆனால் அவற்றை நாம் கூட இந்தி பெல்ட் என்றே பொதுப் புத்தியிலிருந்து அழைக்கிறோம்.
இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, பீகார் , குஜராத்,
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,
ஜார்க்கண்ட் இவற்றோடு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உள்ளிட்டவைகளையும் சேர்த்துக் கொண்டு உள்ளார்கள்.
ஆனால் மேற்கண்ட எல்லா மாநிலங்களுக்கும் இராஜஸ்தானி, பஞ்சாபி, பீகாரி, மராத்தி, குஜராத்தி என்று தனித்த மொழிகள் இருக்கின்றன.
இவற்றில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை முழுவதும் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் போல் இன்று வரை ஒரு பிம்பத்தை கட்டி உருவாக்கி வைத்துள்ளார்கள்.
ஆனால் அதுவும் கூட போலி பிம்பமே என்பதை 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு நமக்குச் சொல்கிறது.
இந்திய விடுதலைக்கு முன்பு வரை மேற்கண்ட இந்தி பெல்டுகளில் மட்டும் பேசப்பட்ட மொழிகளாக பிரிட்டிஷ் அரசு பட்டியலிட்டுள்ள மொழிகள் இந்தி, உருது, பஞ்சாபி, இராஜஸ்தானி உள்ளிட்ட மொழிகளோடு இந்துஸ்தானி, மைதிலி, பிரசு பாஷா, பக்ரி, மேவாரி, ஜெய்புரி, சட்டிஸ்காரி, மார்வாரி, பந்தேலி, ஆஜ்மீரி, தம்தி, ராகோ பான்சி, பலாகி, லோடி, கிராரி, மிர்கனி, பைகனி, பாண்டோ, ஸ்வதி, அதுகுரி, பாடு, இராஜ்காடி, நுனியா, பங்கி, கோசாவி, பர்தேசி, கலாரி, அபு, பர்பி, கோசங்கா, பாடி, பஸ்தாரி, சடி, போவாரி, மகேசுரி, போபாலி, மாதுரி, சடாரி, போஜ்புரி, உத்கேதி ௲ போலி, கோரக்பூர், முசல்மானி, பூலியா, புவானி, பரத்பூரி, கங்காபாடி, உத்தாரி, லோதாந்தி, சங்கலி, வாணி, கோத்யானி, இராஜபுதானி, ஆக்ராவாலி, சார்மாலி,பாமி,மராரி,
கோர்க்காலி, குர்சார், மராரி, ஓகி, நிமாதி, மிர்சாபுரி, கோட்வாரி, கங்கேரி, தேவநாதரி, கோர்த்தி, பான்சாரி, கந்தால்,
அகரி,பிரதாப்காடி, பான்சாரி, பூலி, குருமாலி, போயாரி, இரிவை, மேர்வாரி, இரங்கடி, கால்பீ என்று 80க்கும் மேற்பட்ட மொழிகளை பட்டியலிடுகிறது.
இவை ஒன்றும்
சமஸ்கிருதம் போல் சில நூறு பேரின் தாய்மொழி அல்ல.
ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் பேசிய மொழிகள் ஆகும்.
ஆனால் இவற்றின் நிலை என்ன என்பது தான் நம் கேள்வியே.
ஒரு மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல.
அது அந்த மண்ணின் பண்பாட்டை, மக்களின் வரலாற்றை தாங்கியுள்ளது.
மொழியை அழித்தால் அந்த மக்களை முழுவதும் அடிமையாக்கலாம் என்பதற்கு இந்தி பெல்டுகளே சாட்சி.
அந்த இளைஞனின்
சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசம் நர்மதை - சோன்
பள்ளத்தாக்குகளுக்குள் இருக்கிறது.
பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலங்கள் முதல் மத்தியப்பிரதேசத்தின் வரலாறு தொடங்குகிறது.
பிம்பேத்திகாவில் உள்ள
600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருக்கின்றன.
சாகர்களும் குஷானர்களும்
மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப் பெரும் இராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆட்சி செய்துள்ளார்கள்.
வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும்,
மற்றப் பகுதிகளைச் சத்ரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமி புத்திர சதாகாரணியும ஆதிக்கம் செலுத்தி யுள்ளார்கள்.
அவருக்குப் பிறகு குப்தர்கள்,
ஹூனர்கள், யசோதர்மன்,
ஹர்ஷர், ராஷ்ட்டிரகூடர்கள்,
பராமார்கள், பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், டெல்லி, துருக்கி,
குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள்,
மராட்டியர்கள்,ஹோல்கர்கள்,
மஹாகோசர்கள், சிந்திக்கள்,
போபாலை ஆண்ட
ஆப்கானிஸ்தான் அரசர்
தோஸ் முகமதுகான் என
அந்த மண்ணை எண்ணற்ற மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.
கொடுங்கோன்மை மிக்க முடியாட்சி காலத்திலும்,
ஆங்கில ஆட்சிக் காலத்திலும்கூட அங்கு இந்தி ஆட்சி மொழியாக இருந்ததில்லை.
மால்வி, நிமதி, பகேலி உள்ளிட்ட அந்த மண்ணின் மக்களின் மொழிகளே அங்கு கோலோச்சியுள்ளன.
ஆனால் முடியாட்சி,
அடிமையாட்சி நீங்கி நம்மை நாமே ஆண்டு கொள்ளும் ஜனநாயக ஆட்சி முறை நிலைபெற்றுள்ள இந்த
70 ஆண்டுகளில் தான்
அந்த மக்களின் மொழிகள் முழுவதும் அழிக்கப்பட்டு உள்ளன என்பது வரலாற்று முரண்.
ஏன் இது நிகழ்ந்தது?
இதற்குப் பின் வெறும்
மொழி அரசியல் தான் உள்ளதா? என்றால் இல்லை.
இது ஒரு சித்தாந்த அரசியல்.
கிபி 1340 இல் தில்லியில்
நிலை பெற்ற முகமதுபின் துக்ளக் ஆட்சி அங்கு அப்போது மக்கள் பேசிவந்த சிதைந்த பிராகிரத மொழியை பார்த்தது.
அது அப்போது ஒரு சீரான மொழியாக இல்லாத போது,
அதில் தங்களின் அரபு மொழியை கொண்டு
பாரசீக அரபு கலப்பால் ஒரு சீரான மொழியாக உருது மொழி உருவாக்கப்பட்டது.
உருது எனும் சொல்லுக்குப் பொருள், பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதாகும்.
அதன் பின் உருது மொழி இந்தியாவில் அவர்களின் அரசு மொழியாக இருந்தது.
இந்தி மொழியானது ‘லல்லு ஜிலால்’ என்பவரால் உருது மொழியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.
உருது மொழியில் இருந்த
அரபுச் சொற்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாக சேர்த்து இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார்.
இவ்வாறு அவரால் உருவாக்கப்பட்ட இந்தி மொழிக்கும், அதற்கு முன்பாக வடநாட்டு மக்களால் பல இடங்களில் பேசப்பட்ட சிதைந்த பிராகிருத மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.
இந்தி மொழி என்பதே
இந்து சனாதனத்தின்
தாய் மொழியாக அவர்கள் கருதும் சமஸ்கிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது.
அதனை நன்கு உணர்ந்தவர்கள் உருவாக்கிய சித்தாந்தமே இந்தி, இந்து, இந்தியா என்பதாகும்.
அந்த கொடூர சித்தாந்தத்தை காங்கிரசிற்குள் இயங்கிக் கொண்டிருந்த வலதுசாரிகளின் துணை கொண்டு அரங்கேற்றினார்கள்.
அவர்கள் கனவு கண்ட இந்து தேசியத்தின் பலி பீடத்தில்
பலி கொடுக்கப் பட்டுள்ள மாநிலங்கள் தான் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இந்த இந்தி பேசும் மாநிலங்கள்.
இது தான் இன்றைய இந்துத்துவ அரசியலின் கேந்திரமான
பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது.
ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்”என்ற அந்த இளைஞனை போன்ற சிலர் நம்மூரிலும் கேட்கிறார்கள்.
அவர்களுக்கு இதுவரை கிடைக்காத அந்தக் கேள்விக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம்.
3000 ஆண்டுகளுக்கு நிகரான நாகரீக சமூகத்திற்கான தொல்லியல் சான்றுகளோடு இருக்கும் தமிழ் மண்ணை போலி தேசியத்தின் பலி பீடத்தில் வைத்து காவு கொடுக்க நாங்கள் முட்டாள்களா என்ன?
உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சிமொழியாக இருக்கும் ப்ரியமான தமிழை இந்தியாவைத் தாண்டி எங்கும் இல்லாத இந்தியைக் கொண்டு அழித்துவிட முடியுமா என்ன..?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய சித்தாந்தத்தை கொண்ட தமிழ் மண் நான்கு வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளே வரும் வைதீகத்தின் மொழி வடிவத்தை ஏற்றுக் கொள்ளுமா என்ன..?
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற,
அதிகாரத்திற்கு எதிரான முழக்கத்திற்கு சொந்தக்காரர்களான தமிழ் மண் ஆங்கிலேய ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும்,
சங்பரிவாரத்தின்
நேரடி ஆட்சியானாலும்
யாருக்கும் அஞ்சாமல்
மொழி உரிமைப்போரில்
இந்தித் திணிப்பிற்கு எதிராக அதே கம்பீரத்தோடு எதிர்த்து நிற்கும் தானே.
1937லும், 1948லும் 1965லும் 1986 லும் தமிழகம் மட்டுமே இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தனித்துப் போராடியது.
ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை.
*நமக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராத்தியம் என்று பல்வேறு மாநிலங்களும் களத்தில் குதித்துள்ளன.*
இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டம்.
இந்தச் சூழலில் ஒன்றிய அரசு உருவாக்கிய அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரை போன்ற எந்த வடிவில் இந்தியை திணிக்க நினைத்தாலும் அதை முற்றாக புறந்தள்ளுவதே இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் நல்லதாகும்.
நன்றி:சரோ..வின் புலனத்திலிருந்து..

உலகு தழுவிய சாதி உருவாக்கம்

 

உலகு தழுவிய சாதி உருவாக்கம்

உலகளாவிய சாதி உருவாக்கம் பற்றிய தொகுப்புகள் இணைப்புகளாக உள்ளன. விவாதத்திற்காக இத்தளத்தில் பதிவிடுகிறோம் - செந்தளம் செய்திப் பிரிவு

உலகு தழுவிய சாதி உருவாக்கம்

சாதியின் உருவாக்கம் மதம் சார்ந்ததா? உற்பத்தி முறை சார்ந்ததா? 

 

          ப்போதும் நமது பெரியாரிஸ்ட்டுகள், கிறித்துவ மிஷனரிகள், மிஷனரி ஸ்பான்சர்டு அறிவுஜீவிகள், பின் நவீனத்துவ வாதிகள், அம்பேத்கரிஸ்ட்டுகள் ஆகியோர் மீண்டும், மீண்டும் சொல்வது – சாதியும்,தீண்டாமையும் இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒன்று…. இந்து மதமே சாதியையும் தீண்டாமையையும் தோற்றுவித்தது. சாதிக்கும் நிலவுடமைக்கும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும் தொடர்பில்லை, எனவெ சாதி, தீண்டாமை ஒழிப்பை  நிலவுடமைக்கு எதிரானப் போராட்டத்தால், நிலப்பிரபுத்துவ அமைப்பை தகர்ப்பதால் தீர்க்கமுடியாது. சாதி ஒழிப்புக்கு ஒரே வழி இந்துமத அழிப்பு அல்லது மதம் மாற்றம் மட்டுமே. சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு என்பது ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் ,நிலப்பிரபுத்துவ அமைப்பையும், அதன் உற்பத்தி உறவுகளையும் தகர்ப்பதுடன் இணைந்தது என்பதை மறுத்து சாதியை ஒழிக்காமல் புரட்சியோ, சோசலிசமோ ஒருக்காலும் சாத்தியமில்லை என்பது இவர்களால் கூறப்படும் பெரிய நீண்டகால பொய்.

 

     

சாதி என்பதற்கான வரையரை :

 

             "Caste is a form of social stratification characterized by endogamy, hereditary transmission of a style of life which often includes an occupation, ritual status in a hierarchy, and customary social interaction and exclusion based on cultural notions of purity and pollution."[1][2]  என்று விக்கிபீடியா கூறுகிறது.

 

 

"சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம்" என்று தமிழ் விக்கிபீடியா கூறுகிறது…

அதாவது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் சமூக படிநிலை அமைப்பு – அத்துடன் குலத்தொழிலும், அகமணமுறையும் இணைந்தே காணப்படும் தன்மை.

 

(Caste என்ற ஆங்கில சொல் casta என்ற போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பானிய வார்த்தையின் திரிபு. CASTA என்றால் பிறப்பின் அடிப்படையிலான பிரிவு என்றே பொருள்.)

 

                          இதே வரையரையை தான் பெரியாரிஸ்ட்டுகளும், மிஷனரிகளும், அம்பேதகரிஸ்ட்டுகளும்    கூறுகின்றனர்.நமக்கும் இந்த வரையரையில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நமது முக்கிய கேள்வி சாதி என்பது இந்தியாவிற்கு மட்டும் உரியதா ? இந்து மதம் தான் இந்தியாவிலிருக்கும் சற்றேறக்குறைய 3743 வகையான பிற்படுத்தப்பட்ட(மண்டல் கமிஷன் படி) சாதிகளையும், இதர சில நூறு  தாழ்த்தப்பட்ட சாதிகளையும் தோற்றுவித்ததா? என்பது தான். (ஆனால் இந்து மதம் சாதிக்கு புனிதத் தன்மையை வழங்குகிறது ,படிநிலை அமைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது என்பது வேறு விஷயம் )

 

                   இல்லை என்கிறது பின்வரும் ஆதாரங்கள்….. உண்மையில் ஃபிரான்ஸ்,ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் போன்ற ஆசிய நாட்டிலும் நிலப்பிரபுத்துவ சமூகம் தகர்க்கப்பட்டதுடன், நிலவுடமை உறவுகளும் அழிக்கப்பட்டதால், அங்கு சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

 

               இந்தியா,இலங்கை,நேபாளம்,மியான்மர்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஏமன், போன்ற நாடுகளில் இந்து மதம் மட்டுமல்லாமல்,பவுத்தம்,இஸ்லாம்,கிறித்தவர்கள் ஆகியோரிடையே, அரை நிலப்பிரபுத்துவ-அரைக்காலனிய சமூகத்தின் விளைவாக ,நிலவுடமை உறவுகளும், நிலப்பிரபுத்துவ பண்பாடும் ,கலாச்சாரமும் கட்டிக்காக்கப்படுவதன் விளைவாக சாதியானது மதம் கடந்தும், நாடு கடந்தும் நிலைத்து நிற்கிறது என்பதை பின்வரும் ஆதாரங்கள் நிறுவுகிறது…..

 

ஜப்பானில் காணப்பட்ட சாதி மற்றும் தீண்டாமை(இங்கே காணப்படுவது போன்ற படிநிலை அமைப்புக்கள் – குலத்தொழில்- தீண்டாமை அனைத்தும் ) :

 

1. https://en.wikipedia.org/wiki/Burakumin

2. https://www.britannica.com/topic/burakumin

3. https://shogun2.heavengames.com/articles/history/the-caste-system-of-feudal-japan/?fbclid=IwAR3tdIceSrHzg39Le4k3TOSNFiSTPKQLPSug6Mwl94b_a3w6QLNN2Ofiqeg

 

ஃபிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்ட சாதி, தீண்டாமை முறை (பொது வழி மறுப்பு ,ஆலய(சர்ச்) நுழைவு மறுப்பு, மற்ற மக்களுடன் திருமண உறவு மறுப்பு, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிக் குடியிருப்பு):

 

1. http://en.wikipedia.org/wiki/Cagot

2. https://www.independent.co.uk/news/world/europe/the-last-untouchable-in-europe-878705.html?fbclid=IwAR3tdIceSrHzg39Le4k3TOSNFiSTPKQLPSug6Mwl94b_a3w6QLNN2Ofiqeg

3. http://www.dailymail.co.uk/news/article-1285450/The-untouchables-FRANCE-How-swarthy-Pyrenean-race-persecuted-centuries-abused-today.html

4. http://www.classicreader.com/book/1066/1/

 

கொரியாவில் காணப்பட்ட சாதிப்படிநிலை, தீண்டாமை அமைப்பு :

1. http://en.wikipedia.org/wiki/Baekjeong

2. http://en.wikipedia.org/wiki/Cheonmin

 

இலங்கையில் பவுத்த மத சிங்களவர்களிடையே காணப்படும் சாதி , படிநிலை அமைப்பு, குலத்தொழில் தாழ்த்தப்பட்ட சாதிகள்,மற்றும் தீண்டமை:

 

1. http://en.wikipedia.org/wiki/Caste_system_in_Sri_Lanka

2. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

3. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/rodiya.html

 

ஏமனில் இஸ்லாமியரிடையே காணப்படுகிற சாதி மற்றும் தீண்டாமை முறை:

http://en.wikipedia.org/wiki/Al-Akhdam

 

தெற்காசிய இஸ்லாமிய மக்களிடையே காணப்படும் சாதி மற்றும் உயர்வு தாழ்வு படிநிலை அமைப்பு

: (The social stratification among Muslims in the "Swat" area of North Pakistan has been meaningfully compared to the Caste system in India. The society is rigidly divided into subgroups where each Quom is assigned a profession. Different Quoms are not permitted to intermarry or live in the same community.[13] These Muslims practice a ritual-based system of social stratification. The Quoms who deal with human emissions are ranked the lowest.[13] )

http://en.wikipedia.org/wiki/Caste_system_among_South_Asian_Muslims

 

இந்தியக் கிறித்தவர்களிடையே காணப்படும் சாதியைக் கடைபிடிக்கும் வழக்கமும் சாதி வேறுபாடுகளும்

:

http://en.wikipedia.org/wiki/Caste_system_among_Indian_Christians

 

ஆப்பிரிக்காவில் காணப்படும் சாதி, படிநிலையமைப்பு மற்றும் தீண்டாமை முறைகள்:

The Osu caste is determined by one's birth into a particular family irrespective of the religion practised by the individual. Once born into Osu caste, this Nigerian person is an outcast, with limited opportunities or acceptance, regardless of his or her ability or merit. Obinna discusses how this caste system-related identity and power is deployed within government, Church and indigenous communities.[1]

http://en.wikipedia.org/wiki/Caste_system_in_Africa

- Baskaran Sivaraj

(முகநூலிலிருந்து

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...